சென்னை, ஜூலை 1- ஓய்வு இன்றி பணி செய்ய வற்புறுத்துவதால் புதனன்று (ஜூலை 1) பெரியமேட்டில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துமனைகளுக்கு அழைத்து வர, சிகிச்சை முடிந்தவர்களை வீட்டிற்கு கொன்று செல்ல 108 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்படுகின்றன. சென்னையில் பாதிப்பு அதிகமாக இருப்பதால் வெளி மாவட்டங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அழைத்து வரப்பட்டனர். மாதத்தில் 26 நாட்கள் பணி செய்தால் போதுமென்று கூறி சென்னைக்கு அழைத்து வந்தனர். முறையான உணவு, ஓய்வு வழங்காமல் பணிபுரிய கட்டாயப்படுத்துகின்றனர். எனவே, ஒப்பந்த காலம் முடிந்த தங்களை சொந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்க வலியுறுத்தி இந்தப் போராட்டத்தை நடத்தினர். இதுகுறித்து தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மேலாளர் ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, 3 தினங்களில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என உறுதி கூறினார். இதனையடுத்து ஊழியர்கள் பணிக்கு திரும்பினர்.