சென்னை,அக்.6- கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் யு.கே. சிவஞானம் மறைவுக்கு சிபிஎம் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது. ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்கான போராட்டங்களை முன்னெடுத்தவர் என்று புகழஞ்சலி செலுத்தியுள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளி யிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பின ரும், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் துணைப் பொதுச் செய லாளருமான தோழர் யு.கே. சிவஞானம் (வயது 62) உடல்நலக் குறைவால் அக் டோபர் 6 ஞாயிறன்று உயிரிழந்தார் என்ற செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவரது மறைவிற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
தோழர் யு.கே.சிவஞானம் 37 ஆண்டுகளாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர ஊழியராக செய லாற்றி வந்தவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செயல்பட்டதின் மூல மாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினரானவர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கோவை மாவட்ட செயலாளராகவும், மாநில பொருளாள ராகவும் பணியாற்றியவர். இளைஞர் இயக்கத்தில் பணியாற்றிய காலத்தில் கியூபாவில் நடைபெற்ற உலக இளை ஞர்- மாணவர் மாநாட்டில் பிரதிநிதியாக பங்கேற்றவர்.
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் நடத்திய பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று சிறை சென்றவர்.கோவை ஆத்துப்பாலத்தில் சுங்க டோல்கேட் அமைக்கப்பட்டதை எதிர்த்து அவர் தலைமையில் நடைபெற்ற போராட்டம் குறிப்பிடத்தக்கது ஆகும். அதில் 400 பேர் கலந்து கொண்டு 12 நாட்கள் சிறை யில் அடைக்கப்பட்டனர்.
கோவையில் குண்டு வெடிப்பு என்கிற கொடூரம் நடந்த போது இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் வெண்கொடி ஏந்தி 3 நாட்கள் தொடர் நல்லிணக்க நடைபயணத்தை தலைமையேற்று ஒருங்கிணைத்தவர். பின்னர் கட்சியின் கிழக்கு நகரக்குழு செயலாளராக செயல்பட்டவர். மாவட்டத் தலைவர்களில் ஒருவராகவும் திறம்பட செயல்பட்டவர் ஆவார். தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநில துணைப் பொது செயலாளர் பொறுப்பிலும் பணியாற்றியவர். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெ டுத்தவர். கோவை மாவட்டத்தில் தீண்டா மைச்சுவர் இடிப்பு, ஆலய நுழைவு போராட்டங்களை முன்னெடுத்தவர்.
பரந்த வாசிப்பு பழக்கம் கொண்டவர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர் ஆவார். பல்வேறு தலைப்புகளில் நாளிதழ் களில் கட்டுரைகள் எழுதியவர். வைக்கம் போராட்டம் குறித்து சிறந்த நூல் ஒன்றையும் எழுதியுள்ளார். மார்க்சிய, பெரியாரிய மற்றும் அம்பேத்கரிய அமைப்புகளோடு சிறந்த தோழமையை பேணியவர். அவரது மறைவு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.
அவரது மறைவால் துயருற்றுள்ள அவரது மனைவி இந்துமதி அவர் களுக்கும், மகள் பாரதிப்பரியா மற்றும் குடும்பத்தினர்களுக்கும், தோழர் களுக்கும் கட்சியின் மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபத்தையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறது.