விழுப்புரம், நவ.27- விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் வட்டம், டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்த இருளர் பழங்குடியின மக்களுக்கு சாதிச் சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சி.பழனி புதனன்று வழங்கினார். அப்போது மாவட்ட ஆட்சியர் பேசுகையில், மின்னணு குடும்ப அட்டை, ஆதார் அட்டை, சாதிச்சான்றிதழ், இருப்பிடச்சான்றிதழ், வருமானச்சான்றிதழ், இலவச வீட்டுமனைப்பட்டா, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடு வழங்குவது போன்ற பல்வேறு துறை சார்ந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் திருவெண்ணெய்நல்லூர் வட்டம், டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்த 28 இருளர் பழங்குடியினர் மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. டி.எடையார் கிராமத்தில், குடிசைகளில் வசிக்கும் இருளர் என்ற பழங்குடியின மக்களுக்கு துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ், வீடு கட்டிக்கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.