சென்னை, ஜூலை 13- ஏழை மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை தமிழக அரசு வகுக்க சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா தொற்று பாதிக்காமல் தடுக்க ஊட்டச்சத்து மிகுந்த உணவை உட்கொள்ள வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் அறிவுறுத்தியுள்ளது. எனவே, தமிழகத்தில் செயல்படும் அனைத்து அம்மா உணவகங்க ளிலும் இலவச முட்டைகள் வழங்கவும், ஏழை மாணவர்களுக்கு சத்துணவு வழங்கவும் திட்டம் வகுக்க கோரியும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதா பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தர ரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏழை மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாமல் தடுக்க தமிழ கம் முழுவதும் உள்ள 407 அம்மா உணவகங்க ளிலும் ஊட்டச்சத்து நிறைந்த முட்டைகளை இலவசமாக வழங்க வேண்டும் என்று மனு தாரர் தெரிவித்தார். தற்போது பள்ளிகள் அனைத்தும் மூடப் பட்டுள்ளதால், மாநிலம் முழுவதும் உள்ள 43 ஆயிரத்து 243 சத்துணவு மையங்கள் மூலம் மாணவர்களுக்கு சத்துணவு வழங்க திட்டம் வகுக்க வேண்டும் எனவும் வாதிட்டார். இதனை கேட்ட நீதிபதிகள், ஏழை மாண வர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிக ரிக்க சத்துணவு மையங்கள் மூலம் விட்டமின் மருந்துகள் வழங்குவது போன்ற திட்டங்களை வகுக்க தமிழக அரசுக்கு அறிவுறுத்தி, இந்த மனு தொடர்பாக ஜூலை 20 ஆம் தேதிக்குள் விளக்கமளிக்க உத்தரவிட்டனர்.