tamilnadu

img

சமூக நலப் பணிகளுக்காக அரை மாரத்தான் ஓட்டம்

சென்னை,ஜூலை 23- கை, கால்களை இழந்தவர்களுக்கு புரோஸ்டெடிக் எனும் செயற்கை கை, கால்களை பொருத்த நிதி திரட்டுவதற்காக  ஆண்டுதோறும் சென்னையில் கவ்ஸ் டிரீம் ரன் எனப்படும் அரை மாரத்தான் நடத்தப்படு கிறது. இந்தாண்டு நடத்தப்பட்ட மாராதான் ஓட்டத்தில் சென்னையை சேர்ந்த இளைஞர்க ளும் பெரியவர்களும் பெருமளவில் கலந்துகொண்டு இந்த சீரிய முயற்சிக்கு தங்களது ஆதரவை வெளிப்படுத்தினர். இதுபோன்ற நிகழ்ச்சி மூலமாக 150க்கும் மேற்பட்டவர்களுக்கு செயற்கை கை கால்கள் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஓட்டப்பந்தயத்தை மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் காவல்துறை தலை வருமான ஆர்.நட்ராஜ் தொடங்கிவைத்தார்.   10 கி.மீ மற்றும் 21.1 கி.மீ பிரிவுகளில் பங்கேற்ற சுமார் 5400 ஓட்டப்பந்தய வீரர்கள் கலந்து கொண்டனர். 1000 க்கும் மேற்பட்ட பெண்களும் இதில் கலந்துகொண்டனர்.