tamilnadu

img

சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அமைச்சர் பாண்டியராஜன் தகவல்

சென்னை:
கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.

அரும்பாக்கத்தில் சித்த மருத்துவமனை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அமைச்சர் பாண்டியராஜன் கூறியதாவது: பாரம்பரிய தமிழ் மருத்துவம் மிகுந்த பயனளிக்கக்கூடியது.  தமிழக அரசு சித்தாவை மேம்படுத்த முக்கியத்துவம் கொடுக்கிறது. அதனை நிரூபிக்க உயர்நீதிமன்றம் அரசுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது.கொரோனா சிகிச்சைக்காக 7 சித்த மருத்துவ ஆராய்ச்சிக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள் ளது. திருவண்ணாமலை, வேலூர் உள்ளிட்ட இடங்களில் கொரோனா மையங்களில் சித்த மருத்துவம் பின்பற்றப்படுகிறது.தண்டையார்பேட்டை மண்டலத்தில் இதுவரை 80% பேர் கொரோனாவிலிருந்து குணமடைந்துள்ளனர்.பிற மாவட்டங்களிலும் சித்த மருத்துவத்தைப் பயன்படுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்து வருகிறார்.இவ்வாறு அவர் கூறினார்.

;