tamilnadu

img

கண்தான இயக்கத்திற்கு நடிகர் விக்ரம் ஆதரவு

சென்னை,செப்.4  சென்னையில் டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனை, கோடம்பாக்கத்திலும் மற்றும் திருவொற்றியூரிலும் நவீன கண் சிகிச்சை மருத்துவமனைகளை தொடங்கியுள்ளது. இதனை பிரபல நடிகர் சீயான் விக்ரம் புதனன்று (செப்.4) திறந்துவைத்தார். பின்னர் தனது கண்களை தானமாக வழங்குவதற்கான உறுதிமொழியை படிவத்தை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர் தனது ரசிகர்க ளையும் கண்தானம் செய்யு மாறு கேட்டுக்கொண்டார்.  பார்வைத்திறன் அற்றவர்க ளாக இருப்பதால், இந்த அழகான உலகை காண்ப தற்கான வாய்ப்பை பலர் இழந்துள்ளனர்.  நமது இறப்பிற்குப் பிறகு நமது கண்களை தானம் செய்வதன் மூலம் பார்வையற்ற அந்த நபர்களுக்கு பார்வைத்திறனை வழங்க  முடியும் என்றார். டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவ மனைகள் குழுமத்தின் தலைவர் பேராசிரியர்  அமர் அகர்வால் பேசுகையில் புதிய மருத்துவ மனைகள் மூலமாக வறுமைக்கோட்டி ற்கு கீழ் வசிக்கும் கோடம்பா க்கம் திருவொற்றியூர் பகுதிகளை சேர்ந்த 100 பேருக்கு இலவச கண் அறுவை சிகிச்சை செய்யப்ப டும் என்றார்., கோடம்பாக்க த்தில் அமைந்துள்ள டாக்டர் அகர்வால் கண் மருத்துவ மனையின் மருத்துவ சேவை கள் துறையின் தலைவர் டாக்டர். பாஸ்கரன் உள்பட பலர் இதில் கலந்து கொண்ட னர்.