சென்னை, ஜூன் 16- தமிழகத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் காலத்துக்கான நிவாரணத் தொகை விடு விக்கப்பட்டுள்ளதாக, மீன்வள த்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு வருடமும் மீன்களின் இனப்பெருக்க காலமான ஏப்ரல் 15ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரையிலான 60 நாட்க ளுக்கு, மீனவர்கள் கடலில் சென்று மீன்பிடிக்க தடை விதிக்கப்படும். இந்த காலத்தில் மீன்கள் முட்டை யிட்டு குஞ்சு பொறிக்கும் என்பதால் மீன்வளத்தை பாதுகாக்க இந்த சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தடை காலத்தில் விசைப்படகு கள் மூலம் ஆழ்கடலுக்குச் செல்ல அனுமதி இல்லை. ஆனால் நாட்டுப்படகில் குறைந்த தூரம் சென்று மீன் பிடித்து வர அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் நாட்டுப்படகுகளில் சென்று மீன்பிடித்து வந்தனர். இந்நிலையில் தமிழகத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக் காலத்துக்கான நிவாரணத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தகவல் தெரி வித்துள்ளார். ஞாயிறன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மீன்பிடி தடைக்காலத்திற்கான நிவாரணத் தொகையாக மீனவர் குடும்பம் ஒன்றுக்கு ரூ. 5000 வழங்கப்படும். கடந்த காலத்தைப் போன்று இந்த ஆண்டும் 1.67 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.5000 வழங்கப்படும்.மொத்த நிவாரணத்தொகையாக ரூ. 83.50 கோடி பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது என்றார்.