சென்னை,மே 8- பொறியியல், கலை அறிவியல் படிப்புகளுக்கு ஆன்லைன் விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில் மாண வர்கள் உற்சாகத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த ஆண்டு வணிகவியல், பொருளியல், கணக்குப் பதிவியல் பாடங்களில் சென்டம் எடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் கட்-ஆப் மார்க் 99-100 வரை செல்ல வாய்ப்பு இருப்பதாக கருதப்படு கிறது. அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஒரு லட்சத் திற்கும் மேலான இடங்கள் உள்ளன. பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.பி.ஏ., பி.எஸ்.சி., பி.சி.ஏ. உள்ளிட்ட பல்வேறு பாடப் பிரிவுகளில் சேருவதற்கு போட்டி போட்டு விண்ண ப்பிக்கின்றனர்.
அரசு கலைக் கல்லூரிகளில் மிக குறைந்த கட்ட ணத்தில் படிக்க ஏழை, நடுத்தர குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் ஆர்வமாக உள்ளனர். தனியார் கல்லூரி களில் லட்சக்கணக்கில் பணம் செலவு செய்து படிப்ப தற்கு வசதியில்லாத குடும்பத்தை சேர்ந்த மாணவ-மாணவி கள் அரசு கல்லூரிகளை நாடுகின்றனர். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள கலை அறிவி யல் கல்லூரிகளில் இடம் கிடைத்தால் போதும். படிப்பு செலவு (சுமை) இல்லாமல் போய் விடும் என பெற்றோர்கள் கருதுகிறார்கள்.
இந்த நிலையில் தனியார் கல்லூரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. பி.காம் (பொது), பி.காம் (நிதி), கார்பரேட் மற்றும் பி.ஏ. ஆங்கிலம், வரலாறு, கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவு களை தெரிவு செய்து இடங்களை புக் செய்து உள்ள னர். சென்னையில் உள்ள டாப் கலை அறிவியல் கல்லூரி களில் இடம் பிடிக்க அரசியல் தலைவர்கள், அதிகாரி கள் செல்வாக்கை பயன்படுத்தி சிபாரிசு கடிதம் பெறும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
சென்னையில் லயோலா கல்லூரி, டி.ஜி. வைஷ்ணவக் கல்லூரி, எத்திராஜ் கல்லூரி, சென்னை கிறிஸ்தவ கல்லூரி, ஸ்டெல்லா மேரி உள்ளிட்ட சில கல்லூரிகளில் பி.காம் இடத்திற்கு அலை மோதுகிறார்கள். கட்-ஆப் மார்க் அடிப்படையில் மாணவர் சேர்க்கை என்றாலும் தங்க ளின் செல்வாக்கை பயன்படுத்தி எப்படியாவது இடம் வாங்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளனர்.
இதுதவிர பாரதி மகளிர் கல்லூரி, ராணி மேரி கல்லூரி, மாநில கல்லூரி போன்ற அரசு கலைக் கல்லூரிகளுக்கும் எம்.பி., எம்.எல்.ஏ. அமைச்சர்களின் சிபாரிசு கடிதம் பெறு வதில் தீவிரமாக உள்ளனர். ஒரு சில கல்லூரிகளில் புதிய பாடப் பிரிவுகளும் தொடங்கப்பட்டு உள்ளது. அதற்கும் போட்டி ஏற்பட்டுள்ளது. கலை அறிவியல் கல்லூரி களில் சேர இது வரையில் 50 ஆயிரத்துக்கும் மேற் பட்டவர்கள் விண்ணப்பித்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.