tamilnadu

குடியிருப்புகளுக்கு திட்ட அனுமதி: உள்ளாட்சி அமைப்புக்கு அதிகாரம்....

சென்னை:
தமிழகத்தில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் பத்தாயிரம் சதுர அடி வரை பரப்பளவுள்ள குடியிருப்புகளுக்கான திட்ட அனுமதியை உள்ளாட்சி அமைப்புகளே வழங்கத் தமிழக அரசு அதிகாரம் அளித்துள்ளது. 

கட்டடங்களுக்குத் திட்ட அனுமதி வழங்கும் முறையை எளிமைப்படுத்தும்படி இந்திய ரியல் எஸ்டேட் மற்றும் மேம்பாட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு அரசுக்குக் கோரிக்கை விடுத்தது.இதையடுத்துக் குடியிருப்புக் கட்டடத்தின் மொத்தக் கட்டுமானப் பரப்பு 10 ஆயிரம் சதுரஅடி மற்றும் 8 குடியிருப்பு யூனிட்டுகள், அதே நேரம் 12 மீட்டர் உயரத்துக்கு மிகாமல் ஸ்டில்ட் உட்பட 4 தளங்கள் அல்லது தரைத்தளம் உட்பட 3 தளங்கள் கொண்ட கட்டடம் வரை உள்ளாட்சி அமைப்புகளே திட்ட அனுமதி வழங்கலாம் என அரசுக்கு நகர ஊரமைப்புத் திட்டத்துறை பரிந்துரைத்தது.வணிக வளாகக் கட்டடங்களைப் பொறுத்தவரை சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் அல் லது நகர ஊரமைப்புத் திட்டத் துறையில் அனுமதி பெற வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.இந்தப் பரிந்துரையை ஏற்றுச் சென்னை தவிர மற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்குக் கட்டட அனுமதி வழங்கும் அதிகாரத்தைத் தமிழக அரசு அளித்துள்ளது.