சென்னை:
பெரியாறு அணையி லிருந்து பாசனத்திற்காக அக்டோபர் 7ஆம் தேதி முதல்120 நாட்கள் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடிபழனிசாமி உத்தர விட்டுள்ளார்.
இதுதொடர்பாக, முதல்வர் அக்டோபர் 3 அன்றுவெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:தேனி மாவட்டத்தில் உள்ள பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத் தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ்உள்ள ஒருபோக பாசனநிலங்களுக்கு பாசனத்திற் காக தண்ணீர் திறந்து விடுமாறு விவசாயிகளிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.
விவசாயிகளின் வேண்டுகோளினை ஏற்று, கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார்வாய்க்கால்களின் கீழ் உள்ளஒருபோக பாசன நிலங்க ளுக்கு பெரியாறு அணையி லிருந்து விநாடிக்கு 100 கன அடி வீதம் பாசனத்திற்காக வரும் 7ஆம் தேதி முதல் 120 நாட்களுக்கு மொத்தம் 1,037 மி.க. அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன்.இதனால், தேனி மாவட்டம், தேனி வட்டம் மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5,146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.மேலும், பெரியாறு அணையிலிருந்து 18 ஆம் கால்வாயில் தண்ணீர் திறந்துவிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.இதுதொடர்பாக வெளி யிட்ட அறிக்கையில், விவசாயிகளின் கோரிக்கை யினை ஏற்று, தேனி மாவட் டம், 18ஆம் கால்வாயின் (பழனிவேல் ராஜன் கால்வாய்) கீழ் உள்ள4,614.25 ஏக்கர் ஒருபோக பாசன நிலங்களுக்கு பெரியாறு அணையிலிருந்து வரும் 7ஆம் தேதி முதல்30 நாட்களுக்கு, வினாடிக்கு 98 கன அடி வீதம், மொத்தம் 255 மி.கன அடி தண்ணீர் திறந்துவிட நான் ஆணையிட்டுள்ளேன். விவசாயிகள் நீரைச் சிக்கனமா கப் பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.