tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

விரைவில் உணவு பதப்படுத்தும் தொழில் கொள்கை

தமிழ்நாட்டில் உணவு பதப்படுத்தும் தொழில் கொள்கை  விரைவில் வெளியிடப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அறிவித்தார். வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த  விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், “வேளாண்மை - உழவர் நலத்துறையின் அனைத்துத் திட்டங்களையும் ஆலோ சனைகளையும், தரமான வேளாண் இடு பொருட்களையும் விவசாயிகள் ஒரே இடத்தில் பெற்றுப் பயனடைய ஏதுவாக ஏழு ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்கள், ரூ. 25 கோடியே 3 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும். ரசாயன உரங்களின் தரத்தை ஆய்வு செய்து விவசாயிகளுக்குத் தரமான உரங்கள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் திருநெல்வேலி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு தரக்கட்டுப் பாட்டு ஆய்வகம் ரூ.6 கோடியில் அமைக்கப்படும். 386 ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையங்களில் விவசாயி களுக்கு வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்தவும் அவற்றைக் கண்காணிக்கவும் கண்காணிப்புக் கேமிராக்கள் மற்றும் மின்னணு வருகைப் பதிவேடு இயந்திரங்கள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்படும். தமிழ்நாடு உணவுபதப்படுத்தும் தொழில்களுக்கான கொள்கை   விரைவில் வெளியிடப்படும் என்று 21 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

240 குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள்  

சென்னை, ஏப்.4- தமிழ்நாட்டில் 317 வட்டங்களில் 240 குற்ற வியல் நீதிதுறை நடுவர் நீதிமன்றங்கள் இளநிலை உரிமையியல் நீதிபதி நிலையில் செயல்பட்டு வருகின்றனர். இந்த நீதிமன்றங்கள் மூன்றாண்டுக்கு மேற்படாத சிறை தண்டனையோ  அல்லது ரூபாய் 10 ஆயிரத்திற்கும் மிகாத அபாரதமோ அல்லது இவை இரண்டும் சேர்ந்தோ, விதிக்கக்கூடிய குற்ற வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் தகுதியை பெற்றுள்ளது என்று தமிழ்நாடு சட்டப் பேரவையில்,  கொள்கை விளக்கக் குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் எஸ்.ரகுபதி இதனை தெரிவித்தார்.  நீதித்துறை யின் சுதந்திரத்தை பாது காக்க அனைத்து வழக்காடி களுக்கும் விரைவான நீதி கிடைப்பதற்கு அரசு உறுதி யாக உள்ளது என்றும் தெரிவத்தார்.