tamilnadu

ஆவின் பால் விலை உயர்கிறது

சென்னை, ஜூன் 1- தனியார் பால் விலையை தொடர்ந்து ஆவின் பால்விலையும் விரைவில் உயர உள்ளதாக பால் வளத்துறைஅமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். தனியார் பால் விலை உயர்வு லிட்டருக்கு இரண்டுரூபாய் விலை உயர்த்தப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.அதன்படி 1 லிட்டர் பால் ரூ.56 ஆகவும், சமன்படுத்தப்பட்ட 1 லிட்டர் பால் ரூ.44 ஆகவும், நிலைப்படுத்தப்பட்ட பால் ரூ.50 ஆகவும், கொழுப்பு சத்து செறிவூட்டப்பட்ட பால் ரூ.54 ஆகவும் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்நிலையில் ஆவின் பால் விலையும் அதிகரிக்க உள்ளதாக அமைச்சர் அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  உலக பால் தினத்தை முன்னிட்டு சென்னைநந்தனம் ஆவின் இல்லத்தில் நடைபெற்ற விழாவில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறுகையில், பொதுமக்களை பாதிக்காத வகையில் பால் விற்பனை விலையை உயர்த்த தீவிரமாக ஆலோசித்து வருவதாகவும், முதல்வரிடம் பேசி ஆவின் பால் கொள்முதல்விலையை, விரைவில் உயர்த்த உள்ளதாகவும் கூறினார்.

;