கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கின் காரணமாக பேரழிவு ஏற்பட்டுள்ளது. ஏராளமானோர் உயிரிழந்திருக்கின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்து இடம்பெயர்ந்துள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் சேதமடைந்துள்ளன.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் கேரள மக்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கேரள முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்குவதாக திமுக அறக்கட்டளையின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த மழை வெள்ளத்தால் உயிரிழந்த கேரள மக்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளதோடு பாதிக்கப்பட்டிருக்கும் மக்கள் விரைவில் மீண்டு வர ஆறுதலையும் தெரிவித்துள்ளார்