tamilnadu

img

சென்னையில் விமான சேவை மீண்டும் துவங்கியது

சென்னை, டிச.1-  பெஞ்சல் புயல் காரணமாக, சென்னையில் சனிக்கிழமை காலை முதல் கனமழை பெய்யத் துவங்கியது. மழையுடன் பலத்த காற்றும் வீசியது. விமான நிலையத்தில் ஓடு தளத்திலும் தண்ணீர் தேங்கியது. இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக, 13 மணி நேரங்களாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது. டிசம்பர் 1 ஆம் தேதி அதிகாலை 4 மணிக்கு விமான சேவை மீண்டும் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தநிலையில் அதிகாலை 1 மணிக்கே விமான சேவை துவங்கியது.