வேலூர், ஆக. 26- மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் இரு வாலிபர்கள் பரிதாபமாக பலியானார்கள். திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த மெழுகம்பூண்டி கிரா மத்தை சேர்ந்தவர் பார்த்தீபன் ( 20), அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (20), கார் ஓட்டுநர். இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் ஆரணியிலிருந்து ஆற்காடு நோக்கி வந்தனர். அப்போது ஆற்காட்டி லிருந்து ஆரணி நோக்கி சென்ற கார் விளாப்பாக்கம் தனியார் கல்லூரி அருகே வெங்கடேசன் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட வெங்கடேசன், பார்த்தீபன் ஆகிய இருவரும் சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் படுகாயமடைந்த வேலூர் தொரப்பாடியை சேர்ந்த கார் ஓட்டுநர் இம்ரான், ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விபத்தில் பலியான வெங்கடேசன், பார்த்தீபன் ஆகியோர் உடல் களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவண்ணாமலை
திருவண்ணாமலை மாவட்டம் தண்ட ராம்பட்டை அடுத்த திருவடத்தனூர் கிரா மத்தினை சேர்ந்த காலித், ஷாகித், தாகித் ஆகிய 3 பேர் திருவண்ணாமலையிலிருந்து திருவடத்தனூருக்கு, இரு சக்கர வாக னத்தில் சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட சாலை விபத்தில், காலித், ஷாகித் ஆகிய 2 பேர் சம்பவ இடத்தில் பலியாகினர். தாகித் திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பலியானார். இந்த விபத்து குறித்து தானிப் பாடி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.