சென்னை, ஜன. 31- சென்னை ஆழ்வார் பேட்டை செயிண்ட் மேரீஸ் சாலையில் உள்ள தி ரெயின்ட்ரீ ஹோட்டலில் உள்ள அபௌவ் சீ லெவல் உணவகத்தில் மீன் சந்தை என்ற பெயரில் கடல் உணவுத் திருவிழா நடைபெறுகிறது. ஜனவரி 24 ஆம் தேதியி லிருந்து, பிப்ரவரி 16 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள இந்த விழாவில் பல்வேறு வகையான மீன்கள், நண்டு கள், இறால்களை கொண்டு வித விதமான சமையல்கள் செய்யப்படுகின்றன. புதி தாக கொள்முதல் செய்யப் பட்ட கடல் உயிரினங்களி லிருந்து 35-க்கும் அதிகமான கடல் உணவு தயாரிப்பு களிலிருந்து இதில் விரும்பி யதை தேர்ந்தெடுத்து உண்டு மகிழலாம். இவைகளோடு, இன்னும் சுவையான துணை உணவுகள், ஸ்டார்ச்கள் மற்றும் தெவிட்டாத சாஸ்கள் ரசித்து உண்பதற்காக இதில் கிடைக்கும் என்று உணவகத்தின் தலைமை சமையல் கலைஞர் ஜெய் சங்கர் கூறினார். பரகுடா, ஸ்னாப்பர், கேட், ஸ்வார்டு, துலாபி, கானாங் கெளுத்தி, மடவை, சிப்பி உள்ளிட்ட மீன்களும், ஆக்டோபஸ், கிளிஞ்சல், ஸ்கேலப்ஸ், சீர் ஃபிஷ், சுறா, ஹில்சா, பப்டா, உயி ருள்ள வைரல் , நண்டு, கிங் இறால்கள், ரோகு, கட்லா மற்றும் இன்னும் பல கடல் உயிரினங்கள் இத்திரு விழாவில் உணவுகளாக பரி மாறப்பட உள்ளன.