tamilnadu

img

குளத்தில் மீன்மார்க்கெட்: வீணான மக்கள் வரிப்பணம்

அம்பத்தூர், ஜூன் 11-  சென்னை மாநகராட்சி, அம்பத்தூர் மண்டலம் 7க்குட்பட்ட சிடிஎச் சாலையில் வணிக வளாகம் உள்ளது. இந்த வணிக வளாகத்தின் பின்புறத்தில் உள்ள புறம்போக்கு நிலத்தில் பல ஆண்டுகளாக  மீன் மார்க்கெட்  இயங்கி வந்தது. இங்கு 20க்கும் மேற்பட்ட மீன் கடைகள் இருந்தன.  பாடி, கொரட்டூர், தேவர் நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை குடியிருப்பு, மண்ணூர்பேட்டை, மங்களபுரம், பட்டரைவாக்கம், கச்சனாங்குப்பம் பகுதி மக்கள் இங்குதான் மீன் வாங்கி வந்தனர். சிறு மழை பெய்தால் கூட மார்க்கெட்டின் உட்புறத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி நிற்கும். எனவே நிரந்தரமாக மீன் மார்க்கெட் கட்டித்தர வேண்டும் என சென்னை மாநகராட்சி நிர்வாகத்தி டம் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர்.  இதனைத் தொடர்ந்து,  மாநகராட்சி நிர்வாகம் 2016ஆம் ஆண்டு மீன் மார்க்கெட் இடத்தை  ஆய்வு செய்து புதிய மீன் மார்க்கெட் கட்ட ரூ. 1.33 கோடி  நிதி ஒதுக்கி யது. பின்னர் 2016 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது. அதற்கான திறப்பு விழா ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம் செய்து வந்தது. இந்நிலையில் பாடியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் மார்க்கெட் குளத்தில் கட்டப்பட்டுள்ளதாக வழக்கு தொடர்ந்தார். இதையடுத்து மாநகராட்சி அதிகாரிகள் திறப்பு விழாவை கைவிட்டனர்.  புதியதாக கட்டப்பட்ட மீன்மார்க்கெட்டின் ஜன்னல் கதவுகள் உடைந்துள்ளன.  கட்டம் பூட்டியே கிடப்பதால் உட்புறம் சேத மடைந்து வருகிறது. இரவு நேரங்க ளில் மது அருந்துவது, கஞ்சா புகைப்பது உள்ளிட்ட சமூக விரோத செயல்களுக்கு பயன்படும் இடமாக இந்த மீன்மார்க்கெட் மாறிவரு கிறது. எனவே பூட்டிக் கிடக்கும் மீன்மார்க்கெட்டை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், மீன்மார்க்கெட் கட்டடம் கட்டப்பட்டுள்ள இடம் வருவாய் பதிவேட்டில் குளம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பல ஆண்டுகளுக்கு முன்பு சிலர் ஆக்கிரமித்தனர்.

அதன் ஒருபகுதி யில்தான் மீன் மார்க்கெட் இருந்தது. புதிய கட்டடம் கட்டும் போது அந்த இடத்தை அதிகாரிகள் ஆய்வு செய்யாமல் குளம் என்று தெரி யாமலே கட்டடத்தை கட்டியுள்ளனர்.  நீர்நிலைகளை ஆக்கிரமித்து யாரும் கட்டடம் கட்டக் கூடாது என உயர்நீதிமன்ற தீர்ப்பு உள்ளது. இதனால் மீன் மார்க்கெட் குளத்தில் கட்டப்பட்டுள்ளதால் திறக்கமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்கிறார். இதற்கிடையில் மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கும் முன்பு மீன் மார்க்கெட்டை முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்ததாக அங்கு பெயர்பலகை வைக்கப்பட்டுள்ளது. அதில் 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் தேதி திறக்கப்பட்டதாகவும், அமைச்சர்கள் வேலுமணி, பெஞ்சமின் உள்ளிட்டோர் பெயர்களும் கல்வெட்டில் உள்ளது. ஆனால் இன்று வரை திறப்பு விழா நடைபெறவில்லை. மீன்மார்க்கெட் பயன்பாட்டிற்கு வராமலேயே மூடிக் கிடக்கிறது. ஏற்கனவே அரசு பல ஏரி குளங்களில் வீட்டுமனைகளை உருவாக்கியதாலும், நீதிமன்றம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் என பல அரசு அலுவலகங்களையும் கட்டியதால் கடுமையான தண்ணீர் பஞ்சம் நிலவுகிறது. ஆகை யால்தான் நீதிமன்றம் நீர்நிலைகளை ஆக்கிரமித்து எந்த கட்டடமும் கட்டக் கூடாது என அறிவுறுத்தியது. ஆனால் அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் உரிய ஆய்வு செய்யாமல் கட்டடம் கட்டியதால் மக்களின் வரிப்பணம் வீணாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.