tamilnadu

img

காலிப் பணியிடங்களில் ஒப்பந்த ஊழியர்களை நிரப்புக

சென்னை, ஜூலை 27 - ஐடிஐ படித்தவர்கள், ஒப்பந்த ஊழியர்களை கொண்டு காலிப் பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்று மின் ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென்சென்னை திட்ட கிளை-1ன் 15வது மாநாடு சனிக்கிழமையன்று (ஜூலை 27) கிண்டியில் நடை பெற்றது. மின்வாரியத்தில் காலியாக 50 ஆயிரம் பணி யிடங்களில் 35 ஆயிரம் இடங்கள் களப்பணி உதவி யாளர் பிரிவில் உள்ளது. ஐடிஐ படித்தவர்களையும், ஒப்பந்த ஊழியர்களையும் கொண்டு களப்பணி உதவி யாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பகுதி நேர பணியாளர்ளை முழு நேர பணியாளர்களாக நியமிக்க வேண்டும், தளவாட சாமன்களை தடையின்றி வழங்க வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் அவுட்சோர்சிங் பணியாளர்க ளின் ஊதியத்தை நிர்ணயிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டிற்கு திட்டத் தலைவர் வி.பங்குனியான் தலைமை தாங்கினார். தென்சென்னை கிளையின் முன்னாள் செயலாளர் எஸ். அப்பனு கொடியேற்றினார். கிண்டி கோட்டச் செயலா ளர் பி.சோமசுந்தரம் வர வேற்றார். கே.கே.நகர் கோட்டத் தலைவர் ஜெ. மயில்வேலன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் டி. பழனி வேல் மாநாட்டை துவக்கி வைத்தார். வேலை அறிக்கையை செயலாளர ஏ. முருகானந்தமும், வரவு செலவு அறிக்கையை பொரு ளாளர் டி. பண்டாரம் பிள்ளை யும் சமர்பித்தனர். சென்னை தெற்கு மண்டலச் செயலாளர்க;ள ஏ. பழனி, மாநில துணைத் தலைவர் டி. ஸ்ரீதர், திட்டச் செயலாளர்கள் எஸ்.கண்ணன் (மத்திய சென்னை) , என். பால்ராஜ் (செங்கல்ப ட்டு), தென்சென்னை கிளை-2ன் பொருளாளர் ஆர்.லாரன்ஸ் சகாய ஆரோக்கியராஜ், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் பி. அனிதா, ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் ஆர்.கோவிந்தராஜ், பொறி யாளர் அமைப்பின் மாநிலச் செயலாளர் கே. ஆதன் இளங்கீரன், போரூர் கோட்டச் செயலாளர் வி.விஜயபாஸ்கர் உள்ளி ட்டோர் பேசினர். மத்திய அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ். ராஜேந்திரன் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். கே.கே.நகர் கோட்டச் செய லாளர் எஸ்.குமார் நன்றி கூறினார்.

நிர்வாகிகள்

தென்சென்னை திட்டக் கிளை-1ன் தலைவராக கே.தரணி , செயலாளராக ஏ.முருகானந்தம், பொரு ளாளராக டி.பண்டாரம் பிள்ளை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.