சென்னை, ஜூலை 2 - அரசுத் துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை காலமுறை ஊதியத்தில் நிரப்பக் கோரி செவ்வாயன்று (ஜூலை 2) மாநிலம் முழுவதும் அரசு ஊழியர் கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காலிப் பணியிடங்கள் 6 லட்சம் உள்ள நிலையில் நகராட்சி, பேரூ ராட்சி, மாநகராட்சி, மருத்துவத் துறை, பொது சுகாதாரத் துறை உள்ளிட்ட துறைகளில் உள்ள பணி யிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் கொடுக்கப்பட்டுள்ளன.
நில அளவைத்துறை, பொதுப் பணித்துறை, வேலைவாய்ப்பு மற் றும் பயிற்சித் துறை உள்ளிட்ட பெரும்பாலான துறைகளில் உள்ள பணியிடங்கள் ஒப்பந்த முறையில் நிரப்பப்பட்டுள்ளன. சாலை பராம ரிப்பு பணிகளும் தனியாரிடம் கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அரசு ஊழியர் கள் அனைவருக்கும் பழைய ஓய்வூ திய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்; பறிக்கப்பட்ட சரண்டர், 21 மாத கால நிலுவைத் தொகை உள்ளிட்ட உரிமைகளை வழங்கிட வேண்டும்; சத்துணவு மற்றும் அங் கன்வாடி, வருவாய் கிராம உதவி யாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்.ஆர்.பி. செவிலியர்கள் உள் ளிட்ட சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் 3.50 லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும்; சாலைப் பணியாளர் களின் 41 மாத பணி நீக்கக்காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்; கருணை அடிப்படையி லான பணியிடங்களை 5 விழுக் காடாக குறைத்ததை மீண்டும் 25 விழுக்காடாக உயர்த்த வேண்டும்; சத்துணவுத் துறை ஊழியர்களின் ஆண் வாரிசுக்கும் கருணை அடிப்ப டையில் வேலை வழங்க வேண்டும்; முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை அனைத்துப் பள்ளி களுக்கும் விரிவுபடுத்தி சத்துணவு ஊழியர்களை கொண்டு செயல் படுத்த வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியு றுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கம் சார்பில் மாநிலம் முழுவதும் வட்டத் தலைநகரங்களில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழிலகத்தில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாநில பொறுப்பு தலைவர் டேனி யல் ஜெயசிங்கும், ரிப்பன் மாளி கையில் மாநிலச் செயலாளர் அண்ணா குபேரனும் கலந்து கொண்டனர்.