tamilnadu

img

மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டம்...

மின்சார சட்ட மசோதா 2020ஐ கைவிட வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மின்சார வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் சென்னை அண்ணாசாலையில் உள்ள தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மணிமாறன் (தொமுச), மாநிலத் தலைவர் தி.ஜெய்சங்கர், எஸ்.எஸ்.சுப்பிரமணியன், கே.ரவிச்சந்திரன் (சிஐடியு),  சேவியர் (ஐஎன்டியுசி), சுப்பிரமணி (தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம்), சம்பத் (பொறியாளர் சங்கம்), தனசேகர் (மின்சார தொழிலாளர் சம்மேளனம்), ஏ.சேக்கிழார் (டி.என்.இ.பி. சம்மேளனம்), கல்யாண சுந்தரம் (பொறியாளர் யூனியன்), செல்வராஜ் (ஜனதா) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.