சென்னை,பிப்.2 மத்திய பட்ஜெட் நிறை களும், குறைகளும் சமமாக இருக்கின்ற பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது என்று தேமுதிக தலைவர் விஜய காந்த் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள அறிக்கையில் இன்றைய பொருளாதாரத் தின் நிலையை அறிந்து தனி நபரின் வருமானத்தை உயர்த்தக் கூடிய பொரு ளாதார வளர்ச்சிக்கான திட்டம் இல்லாதது ஏமாற்றத்தை தருகிறது. பல கோடி பேர் வேலை வாய்ப்பை உயர்த்துவதற்கு நல்ல செயல் திட்டங்களை அறிவிக்க வில்லை. விவசாயத்துக்கு மிக முக்கிய காரணமாக இருக்கும் நதிகள் இணைப்பு, நதிகள் இணைப்புக்காக எந்த ஒரு அறிவிப்பும் இந்த மத்திய பட்ஜெட் திட்டத்தில் இல்லை. எனவே குறைகளும் நிறைந் திருக்கிறது. மத்திய அரசின் இந்த பட்ஜெட் நிறைகளும், குறைகளும் இணைந்த மத்திய அம்சம் கொண்ட மத்திய பட்ஜெட்டாகவே பார்க்க முடிகிறது என்று தெரிவித்துள்ளார்.