சென்னை,செப்.17- சமூகச் சீர்திருத்தத்திற்காகவும் மூடநம்பிக்கைக ளை களைதல் மற்றும் பெண் விடுதலைக்காகவும் போராடிய தந்தை பெரியாரின் 146 ஆவது பிறந்தநாள் விழா செப்டம்பர் 17 அன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு கீழ் அமைக்கப் பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
புரட்சி வணக்கம்
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், புரட்டுக் கதைகளுக்கும் - வறட்டு வாதங்களுக்கும் வளைந்து கொடுக்காதீர்கள். எல்லாவற்றுக்கும் மேலானது சுயமரியாதை என இனமான உணர்வூட்டி நிமிர்நடை போட வைத்த பகுத்தறிவு பகலவனுக்கு புரட்சி வணக்கம்! என்று தெரிவித்துள்ளார்.