tamilnadu

img

குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி ஆட்சியரிடம் விவசாயிகள் முறையீடு

திருவள்ளூர், மார்ச் 1- குருவராஜ கண்டிகை மற்றும் புதுப்பேட்டை ஆகிய ஊராட்சிகளில் வசிக்கும் மக்களுக்கு இலவச குடிமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து முறையிட்டனர்.

கும்மிடிப்பூண்டி வட்டம்,  குருவராஜ கண்டிகை மற்றும் சூராவரிகண்டிகை கிராமங்களில் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் 20 ஆண்டுகளுக்கு மேலாக  வசிப்போருக்கு,  தமிழக அரசால் 2021 ஆம் ஆண்டு   200 க்கும் மேற்பட்டவர் களுக்கு  இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப் பட்டது. ஆனால்  அரசு கொடுத்த பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்யப்படவில்லை. அதிகாரிகளின் இந்த அலட்சிய போக்கால் தற்போது பல குடும்பங்கள் மின் இணைப்பு  உட்பட அரசு சலுகைகள் எதையும்  பெற முடியவில்லை.

மேலும் விடுபட்ட நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பங் களுக்கு பட்டா வழங்க வேண்டும் என மனு செய்தும்  இதுவரை பட்டா பெற முடியவில்லை. கும்மிடிப்பூண்டி வட்டத் தில்,  பட்டா பெற தகுதி வாய்ந்த குடிமக்களுக்கு கூட வேண்டுமென்றே,  பட்டா வழங்குவதை அதி காரிகள் தவிர்த்து வருவதாக  கூறப்படுகிறது. ஆகவே உடனடியாக மேய்க்கால் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் மக்களுக்கு குடி மனை பட்டா வழங்க வேண்டும். மேலும் ஏற்கெனவே தமிழக அரசால் தரப்பட்ட பட்டாவை கிராம கணக்கில் பதிவேற்றம் செய்து வீடுகளுக்கு மின்  இணைப்புகள் பெற வழி வகை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிறுபுழல் பேட்டை ஊராட்சி கும்மிடிப்பூண்டி அரு கில் உள்ள சிறுபுழல்பேட்டை ஊராட்சிக்குட்பட்ட புதுப்பேட்டை பகுதியில் புல எண்.406 மற்றும் 409-ல் மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் எம்.ஜி.ஆர்.நகர்-1, மற்றும் புல எண். 419-ல் நத்தம் புறம்போக்கு நிலத்தில்  எம்.ஜி.ஆர்.நகர்-2 ல் வசிக்கும்  75 குடும்பங் கள்   இலவச வீட்டுமனைப்  பட்டா மற்றும் மின்இணைப்பு  வழங்கிட வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பிப் 28 அன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு  அளித்தனர்.

ஏற்கெனவே கும்மிடிப்பூண்டி வட்டாட் சியரிடமும் மனு அளித்துள்ள னர் என்பது குறிப்பிடத் தக்கது. இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில செயலாளர் பி.துளசி நாராயணன், ஒன்றிய தலை வரும் சிபிஎம் ஒன்றிய கவுன்சிலருமான எம்.ரவிக்குமார் மற்றும் கிராம  மக்கள் கலந்து கொண்டனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர்  விசாரணை செய்து  உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளார்.