tamilnadu

img

போலி பத்திரப்பதிவு செய்து நில மோசடி

விழுப்புரம், பிப்.24- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட எடச்சேரி கிராம விவசாயிகள் தங்களுக்கு சொந்தமான கழுவெலி நிலங்களை போலி பட்டா, சிட்டா மூலம்  தொடர்ந்து செல்வாக்கு படைத்தவர்கள்  பத்திரப்பதிவு செய்து வரு வதால் தாங்கள்  பாதிக்கப் பட்டுள்ளதாக  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணனிடம்  விவசாயிகள் கூறினர்.  விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்குட்பட்ட எடச்சேரி கிராமத்தின் அருகே சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் கழுவெலி நிலங்கள் உள்ளது,

அதனை  எடச்சேரி கிராம விவசாயி கள் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பயிர் செய்து அனு பவித்து வருகின்றனர்.  இதற்கு அந்த விவசாயி களிடம் பட்டா உள்ளது.  இந்நிலையில்  விவசாயிகள் பெயரில் உள்ள பட்டாவை  போலி நபர்கள் பட்டா மற்றும் சிட்டாவில் பெயர் மாற்றம் செய்து, வருகின்றனர். செல்வாக்கு படைத்த தனிநபர்கள், சென்னை  ரியல் எஸ்டேட்  முதலாளிகள்  100க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்களை  வருவாய் துறை, நில அளவைத் துறை, பத்திரப் பதிவு அலுவலர்கள் உதவி யோடு பத்திரப்பதிவு செய்து,  கம்யூட்டர் மூலம் பட்டா மற்றும் சிட்டா மாற்றி வருகின்றனர்.  

இதுகுறித்து விவசாயி கள் பத்திரப்பதிவு அலுவ லகத்திற்கு சென்று  பத்திரப்பதிவு செய்யக் கூடாது, என்று முறையிட்டு மனு கொடுத்தனர். அதனை  மீறி தொடர்ந்து பத்திரப்பதிவு  செய்யப்பட்டு வருகின்றது.  விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இது குறித்தும் முறையிட் டும் எந்தவித நடவடிக்கை யும் இல்லைஇதனால் விவசாயிகள் வங்கிகளில் எந்தவிதமான உதவியை யும் பெற முடியவில்லை.

இந்நிலையில் எடச்சேரி கிராமத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட விவசாயி ராஜேந்திரன் மனைவி ரமணி, கருணாகரன் மனைவி ராஜேஸ்வரி, கோவிந்தசாமி மனைவி மல்லிகா ஆகியோரின் பட்டாவான எண்.1516, சர்வே எண்.215/1ல் 1.52 எக்டேர் நிலத்தை கிரா மத்திற்கே சம்பந்தமில்லாத நபரான குப்புசாமியின் மனைவி சரஸ்வதி பெயரில் போலியாக பத்திரப்பதிவு செய்து, தங்களின் நிலத்தை சென்னையை சேர்ந்த ஒரு நபரிடம் விற்பனை செய்துள்ளனர். அதே தினத்தில் வாங்கியவர் பெயரில் பட்டா மாற்றம் நடந்துள்ளது.

இந்நிலையில் சமீபத்தில் விழுப்புரத்திற்கு  வருகை தந்த மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணனை விவசாயி கள் நேரில் சந்தித்து மனு அளித்தனர். அவர்கள் அளித்த  கோரிக்கை மனுவை பெற்றுக்கொண்ட மாநிலச் செயலாளர் மாவட்ட வரு வாய் துறை கவனத்திற்கு கொண்டுச் செல்வதாக தெரி வித்தார்.

அப்போது மாவட்டச் செயலாளர் என்.சுப்பிரமணியன் மாவட்ட செயற்குழு உறுப் பினர்கள் எஸ்.முத்துக் குமரன், ஆர்.டி.முருகன் வானூர் வட்ட செயலாளர் எம்.கே.முருகன், வட்டக் குழு உறுப்பினர் சுந்தர மூர்த்தி  உட்பட பலர் உடனிருந்தனர்.