tamilnadu

img

தூர்வாரும் பணிகளை கண்காணிக்க உழவர் குழுக்கள்

சென்னை, பிப்.28- டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை கண்  காணித்திட உழவர் குழுக் களை அமைத்திடும் அரசின்  முடிவுக்கு தமிழ்நாடு விவ சாயிகள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. மேலும், கூடுதல் நிதி ஒதுக்கி மாநிலம் முழுவதும் ஆறுகள், ஏரிகளை தூர்வார வேண்டும் என்றும் வலி யுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு  விவசாயிகள் சங்கத்தின்  மாநிலப் பொதுச்செயலாளர் சாமி.

நடராஜன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு வருமாறு: தமிழ்நாட்டில் 2024-25  ஆம் ஆண்டில் 23 மாவட்டங்க ளில் சிறப்பு தூர்வாரும் பணி களுக்காக ரூ.110 கோடி ஒதுக்  கீடு செய்யப்பட்டு, 27.2.2023  அன்று தமிழ்நாடு முதல மைச்சர் காணொலிக் காட்சி  மூலம் பணிகளை துவக்கி  வைத்துள்ளார்.

பாசனத்திற்  காக மேட்டூர் அணை ஜுன்-12  ஆம் தேதி திறக்கப்படுவது வழக்கமானது. இந்த நிலை யில் பிப்ரவரி மாதத்திலேயே டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை துவக்கியுள்ளதை தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம். தூர்வாரும் பணிகளை கண்காணிப்பதற்காக, பணி கள் நடைபெறும் இடங்களில்  உள்ள விவசாயிகள், அதி காரிகள் உள்ளடக்கிய கண்காணிப்புக் குழுக்களை அரசு அமைத்திட வேண்டும் என்பது தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் நீண்ட காலமாக  வலியுறுத்தி வந்த கோரிக் கையாகும்.

இதனை ஏற்று, தற்போது தூர்வாரும் பணிகள் நடை பெறும் பகுதிகளில் முன் னணி விவசாயிகள், நீர்வளத்  துறை உதவிப்பொறியா ளர்கள், உதவி வேளாண் அலுவலர்கள், கிராம நிர்  வாக அலுவலர்கள் மற்றும் பணிகள் நடைபெறும் ஊரா ட்சியின் ஊராட்சி செயலா ளர்களை உள்ளடக்கிய உழ வர் குழுக்களை அமைத்திட முடிவு செய்துள்ளதையும் வரவேற்கிறோம்.

 அதேநேரத்தில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் பாசன ஆறுகள், வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள், ஏரிகளை தூர்வாரிடுவதற்கு கூடுதலான நிதியை ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். இவ்வாறு சாமி.நட ராஜன் தெரிவித்துள்ளார்.