வேலூர், ஜூலை 19- பெண்களுக்காக வழங்கப்படும் கடன்களை திருப்பி செலுத்தினால் அதிகப்படியான கடன்கள் தொழில் துவங்க வங்கிகள் வழங்க முன்வரும் என பாரத ஸ்டேட் வங்கியின் சென்னை வட்டார தலைமையக பொது மேலாளர் ஷெர்லி தாமஸ் தெரிவித்தார். வேலூர் மாவட்டத்திற்குட்பட்ட வாலாஜா, அரக்கோணம் சரக பாரத ஸ்டேட் வங்கி 10 கிளைகள் சார்பில் கடன் வழங்கும் விழா மண்டல மேலாளர் எஸ்.சேதுமுருகதுரை தலைமையில் நடைபெற்றது. வாலாஜா கிளை துணை மேலாளர் நிஷா வரவேற்றார். இதில் சென்னை வட்டார தலைமையக பொது மேலாளர் ஷெர்லி தாமஸ் கலந்துகொண்டு 300 மகளிர் சுயஉதவிக் குழுவினருக்கு நான்கரை கோடி ரூபாய் வீட்டுக் கடன், மூன்று கோடி ரூபாய் மதிப்பில் விவசாயக் கடன்கள், ஒரு கோடி ரூபா யில் கல்விக்கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு 75 லட்சம் ரூபாயும், முத்ரா கடனாக 15 லட்சம் ரூபாய் என சுமார் 50 வாடிக் கையாளர்களுக்கு 12 கோடியே 75 லட்சம் மதிப்பில் கடன் வழங்கினார். பின்னர் அவர் பேசுகையில், வாடிக்கையாளர்கள் தாங்கள் பெறும் கடனை முறையாக திருப்பிச் செலுத்தினால், அவர்க ளுக்கு மீண்டும் அதிகப்படியான கடன்கள் வழங்கப்படும். விழாவில் பொது மேலாளர் ஜோனா ராகவா, சென்னை - 1 மண்டலம் துணை பொது மேலாளர் பெஞ்சமின் செரியன், தனி நபர் மற்றும் சிறு குறு கடன்கள் வழங்கும் மையத்தின் உதவி பொது மேலாளர் பி.ராதாகிருஷ்ணன், மண்டல அலுவலக முதன்மை மேலாளர் கடன்கள் ரவிக்குமார், முதன்மை மேலா ளர்கள் ஆற்காடு இன்பராசு, அரக்கோணம் உமா, சோளிங்கர் முத்துச்சாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வாலாஜா முதன்மை மேலாளர் ஆபித் அகமது நன்றி கூறினார்.