tamilnadu

மின்கட்டணம் செலுத்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: சிபிஎம்

சென்னை, மே 18 - மின்கட்டணம் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக கட்சியின் தென்சென்னை  மாவட்டச் செயலாளர் ஏ.பாக்கியம், மின்வாரிய மேலாண்மை இயக்குநருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

கொரோனா தொற்று பரவலை தடுக்க பிறப்  பிக்கப்பட்ட ஊரடங்கால், மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் வீட்டு மின்சார பயன்பாடு அதிகரித்துள்ளது. ஊர டங்கு தொடர்ந்து 50 நாட்களுக்கு மேல் நீட்டிக்  கப்பட்டதால். பெரும் பகுதி மக்கள் வேலை  இன்றி, வருமானமின்றி சிரமத்தில் உள்ளனர். இந்நிலையில் மே மாதம் மின் கட்ட ணத்தை செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்  பட்டுள்ளது. எனவே, மின் கட்டணம் செலுத்துவ தற்கான காலத்தை, எப்போதும் வழங்கும் கால  அவகாசத்தோடு சேர்த்து மேலும் ஒரு மாதம் நீட்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப் பட்டுள்ளது.

;