tamilnadu

ஒரு அறிகுறி இருந்தாலும் பரிசோதனை: ஜெ.ராதாகிருஷ்ணன்

சென்னை, ஜூலை 1- ஒரே ஒரு அறிகுறி தென்பட்டாலும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்  கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகா தாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் செய்தி யாளர்களிடம் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறிய தாவது: ஊரடங்கு காலத்தில் நாளொன்றுக்கு 550 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகிறது. சென்னை, மதுரை போன்ற பாதிப்பு அதி கம் உள்ள மாவட்டங்களில் தொடர் தீவிர  கண்காணிப்பை மேற்கொள்ள உத்தர விடப்பட்டுள்ளது. கூடுதலாக காய்ச்சல் முகாம்கள் நடத்தவும், ஒரே ஒரு அறிகுறி இருந்தாலும் கூட சோதனை எடுக்க உத்தர விடப்பட்டுள்ளது. தெருத்தெருவாக ஆட்டோக்களில் ஒலி பெருக்கி மூலம் பொதுமக்களுக்கு விழிப்பு ணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதுவரையில் சென்னையில் 10 ஆயிரத்து 327 காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டு, 6 லட்சத்து 74 ஆயிரம் பேர் பரிசோதிக்கப்பட்டுள்ளனர். தேசிய அளவில் தடுப்பு மருந்து ஆராய்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ கத்தைப் பொருத்தவரை பிளாஸ்மா சிகிச்சை சிறந்த முறையில் நடைபெறு கிறது. ஐசிஎம்ஆர் அனுமதி பெற்று மற்றொரு புறம் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வரு கின்றன. கொரோனா என்பது ஒருவகை நுண்கிருமி, பொதுமக்கள் அதிகம் அச்சப்  படத் தேவையில்லை. முழு ஊரடங்கு தொற்று பரவலை கட்டுப்படுத்த பலன ளித்துள்ளது. பொதுமக்கள் வெளியே அதி கம் செல்லாத நேரங்களில், பரவல் குறைந்  துள்ளது. அதே வேளையில் சோதனை களையும் அதிகப்படுத்த உத்தரவிடப் பட்டுள்ளது. கண்ணகி நகர் போன்ற ஊர்களில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவ டிக்கைகளை அப்பகுதி மக்கள் முழுமை யாக பின்பற்றுகிறார். அதே போல் மற்ற பகுதிகளிலும் கடைபிடிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.