சென்னை,டிச.14- காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் டிசம்பர் 14 சனிக் கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 75.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலை வரும், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பின ருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கடந்த நவம்பர் 27 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்து வர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் சனிக்கிழமையன்று (டிச.14) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
முதலமைச்சர் அஞ்சலி
ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல் தனியார் மருத்துவ மனையில் இருந்து மணப்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். அமைச்சர்கள் உடனிருந்தனர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி எம்.பி., மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, சிபிஐ மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விசிக தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இளங்கோவன் மறைவுக்கு இரங்கல் தெரி வித்துள்ளனர்.