tamilnadu

ஒருவருக்கு தொற்று வந்தாலும் அந்த தெரு முழுவதும் பரிசோதனை சென்னை மாநகராட்சி முடிவு

சென்னை, ஜூலை 25- கொரோனா பாதிப்பு உறுதி செய்யும் நபர்  வசிக்கும் தெருவில்  உள்ள  அனைவருக்கும் தொற்று  பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி திட்ட மிட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள கொரோனா தொற்று பாதித்த வர்களில் சரிபாதி பேர் சென்னையில் உள்ளனர். சென்னை சுற்றியுள்ள திரு வள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்  களையும் கணக்கிட்டால் பாதிப்பின் அளவு சுமார் 60 சதவீதத்தை எட்டும். சென்னையில் ஜூலை 24 வரை 92 ஆயிரத்து 206 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 76 ஆயிரத்து 496 பேர் குண மடைந்து உள்ளனர். 1969 பேர் உயிரிழந்தனர். 13 ஆயி ரத்து 743 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன்படி திருவொற்றி யூரில் 413 பேர், மணலியில்  196 பேர், மாதவரத்தில்  407 பேர், தண்டையார் பேட்டையில் 591 பேர், ராய புரத்தில் 817 பேர், திருவிக நகரில் 1,221 பேர், அம்பத்தூ ரில் 996 பேர், அண்ணா நகரில்  1,756 பேர், தேனாம்பேட்டை யில் 1,136 பேர், கோடம்பாக் கத்தில் 2,189 பேர், வளசர வாக்கத்தில் 846 பேர், ஆலந்  தூர் 536 பேர், அடையாற்றில்  1,155 பேர், பெருங்குடியில்  417 பேர், சோழிங்கநல்லூ ரில் 309 பேர், பிற மாவட்டங்  களை சேர்ந்த 758 பேர்  சிகிச்சை பெற்று வருகின்ற னர். மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் தொற்று எண் ணிக்கை அதிகமாக இருந்த தண்டையார் பேட்டை மற்றும் ராயப்பேட்டை மண்டலத்தில் பாதிக்கப் படுவோர் குறைந்து, குண மடைந்தவர்களின் எண் ணிக்கை அதிகரித்து உள்ளது. அதேசமயம், மத்திய சென்னை வட்டா ரத்தில் உள்ள கோடம்பாக் கம், அண்ணா நகர், தேனாம்  பேட்டை உள்ளிட்ட மண்ட லங்களில் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எனவே. இதை கட்டுப்ப டுத்தும் வகையில், இந்த  மண்டலங்களில் கொரோனா தொற்று கண்டறியப்படும் தெருவில் உள்ள அனை வருக்கும் பரிசோதனை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய் துள்ளது. இதற்காக நட மாடும் வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என்று அனைத்து அலுவ லர்களுக்கும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.