tamilnadu

img

அத்தியாவசிய பொருட்கள் மாதந்தோறும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்!

சென்னை, ஆக. 20 - ரேசன் கடைசிகளில் மாதந் தோறும் பாமாயில், பருப்பு, சர்க்கரை, கோது மை உள்ளிட்ட அத்தியா வசியப் பொருட்கள் கிடைப் பதை உறுதிப்படுத்த வலி யுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தி னர் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தமிழகம் முழுவதும் ரேசன் கடைகள் முன்பு நடை பெற்ற இந்த ஆர்ப்பாட்டங் களில் மாதர் சங்கத்தின், மாநில - மாவட்டத் தலை வர்கள் உட்பட ஆயிரக் கணக்கானோர் பங்கேற்று, கோரிக்கைகளை வலி யுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

பொது விநியோக முறை யை சீர்படுத்த வேண்டும்; மாதந் தோறும் பாமாயில், பருப்பு, சர்க்கரை, கோது மை உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் தவறாம லும், தரம், எடை குறையா மலும் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்; ரேசன் கடைகள் செயல்படும் நேரத்தை அதிகப்படுத்த வேண்டும்; மண்ணெண் ணெய் வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும்; தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் அத்தியாவசிய பொருட்களை மலிவு விலை யில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; ரேசன் கடைகளில், ஊழியர் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்; 500 குடும்ப அட்டைகளுக்கு ஒரு ரேசன் கடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை முன்வைத்து, இந்தப் போராட்டம் நடை பெற்றது.