tamilnadu

img

சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு தமிழில் தயார்: மத்திய அரசு

சென்னை:
சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை தமிழில் தயாராக உள்ளது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

மத்திய அரசு சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கையை வெளியிட்டுள்ளது.  இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டும் உள்ள இந்த வரைவு அறிவிக்கைக்கு எதிர்க்கட்சிகள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதற்கிடையே பிராந்திய மொழியில் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

மீனவர் சங்கம் சார்பில் தமிழில் மொழி பெயர்த்து வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.அந்த மனு வியாழனன்று (ஆக.13) விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசு சார்பில் சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு வரைவு அறிவிக்கை தமிழில் தயாராக உள்ளது. மேல்முறையீடு இருப்பதால் அதற்காக காத்திருக்கிறோம் என்று கூறப் பட்டது.அப்போது ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்குள் எழுத்துப்பூர்வமாக இதை தெரிவிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மத்திய அரசுக்கு வலியுறுத்தியுள்ளது.

;