tamilnadu

img

தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் ஊர் பெயர்கள்

சென்னை:
தமிழ்நாட்டிலுள்ள ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து செயல்படுத்துதல் தொடர்பாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் வளர்ச்சி துறைக்கான மானிய கோரிக்கையில் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட ஆட்சியர் தலைமையிலான உயர்மட்ட குழு அளித்த பரிந்துரையை, அமைச்சர் தலைமையிலான ஆலோசனைக்குழு ஏற்று அறிவித்துள்ளது.1018 ஊர்களுக்கான பெயர்களை தமிழ் உச்சரிப்பு போன்ற ஆங்கிலத்திலும் அமைத்து அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் தண்டையார்பேட் என்பது தமிழைப் போன்று ஆங்கிலத்திலும் தண்டையார்பேட்டை என்று உச்சரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.கிண்டி பார்க் என்பது கிண்டி பூங்கா என்றே அழைக்கப்படும். தூத்துகுரின் என்பது மாற்றப்பட்டு தமிழைப் போன்றே ஆங்கிலத்திலும் தூத்துக்குடி என்று உச்சரிக்கப்படும்.
 

;