tamilnadu

பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

சென்னை, ஜூன் 25- தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் சார்பில் நடப்பு கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு நடத்தப்படுகிறது. அதன்படி, தரமணியில் உள்ள சென்ட்ரல் பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் நேரடி கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை (ஜூன்25) தொடங்கியுள்ளது. சிறப்பு பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 25 முதல் வரும் 27 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடை பெறுகிறது.  ஜூன் 26 அன்று ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27ஆம் தேதி விளை யாட்டு வீரர்களுக்கும் கலந்தாய்வு நடை பெறவுள்ளது.  பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3ஆம் தேதி முதல் ஆன்லைன் கலந்தாய்வு முறையில் நடத்தப்பட உள்ளது. அதேபோல் தொழிற் கல்வி பிரிவினருக்கான நேரடி கலந்தாய்வு ஜூன் 26 முதல் 28 ஆம் தேதிவரை நடை பெறுகிறது.

;