புதுச்சேரி, ஜூலை 19- மத்திய அரசின் புதிய கல்வி வரைவு கொள்கையை திரும்பப்பெற வலியுறுத்தி தெருமுனை மக்கள் சந்திப்புக் கூட்டம் புதுச்சேரி யில் நடைபெற்றது. மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ள மக்கள் விரோத பட்ஜெட்டைக் கண்டித்தும், புதிய கல்வி வரைவு கொள்கையை உடனே திரும்பபெற வேண் டும் எனபன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி முழு வதும் மக்கள் சந்திப்பு தெரு முனை பிரச்சாரக்கூட்டம் நடைபெற்று வருகிறது. புதுச்சேரி முதலியார் பேட்டை தபால்நிலையம் எதிரில் நடைபெற்ற தெரு முனை பிரச்சாரக் கூட்டத் திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் கே.சிவக்குமார் தலைமை தாங்கினார். மூத்த பிரதேசக்குழு உறுப்பினர் தா.முருகன், பிரதேசச் செயலாளர் ஆர்.ராஜாங்கம், நகரக்குழு செயலாளர் மதிவாணன், பிரதேசக்குழு உறுப்பினர்கள் கலிய மூர்த்தி, சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர். இலாஸ்பேட் அசோக் நகரில் நடைபெற்ற தெரு முனைக் கூட்டத்திற்கு கிளைச்செயலாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், உழவர்கரை நகரச் செயலா ளர் நடராஜன், பிரதேசக்குழு உறுப்பினர் ஆனந்து உட்பட பலர் கலந்து கொண்டனர்.