சென்னை,ஆக.19- தமிழ்நாடு சமூக நலத்துறை பணி யாளர் சங்கத்தின் பொன்விழா நிறைவு சிறப்பு பொதுக்குழு சென்னையில் ஞாயிறன்று (ஆக.18) நடைபெற்றது. சங்கத்தின் தலைவர் மு.அன்பரசு தலைமையில் நடைபெற்ற மாநாட்டை தொடங்கிவைத்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலத்தலைவர் (பொறுப்பு) சா. டானியல் ஜெயசிங் பேசினார். முடக்கப்பட்ட சரண்டரை உடனடியாகவழங்க வேண்டும். தமிழகத்தில் காலியாக உள்ள 5 லட்சம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். பழைய பென்சன் திட்டத்தை அமல் படுத்தவேண்டும் போன்ற கோரிக் கைகளுக்காக வருங்காலங்களில் நாம் தொடர்ந்து மிகப்பெரிய போராட்டங்களை நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். எனவே அரசு விரைந்து இந்த கோரிக் கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். மு.அன்பரசு சங்கத்தின் தலைவர் மு.அன்பரசு பேசுகையில், அரசு எந்த ஒரு நலத்திட்டத்தை புதிதாக அறிமுகப்ப டுத்தினாலும் அது சமூக நலத்துறை மீதுதான் திணிக்கப்படுகிறது. திட்டங் களை மக்களிடம் கொண்டு செல்ல அரசு ஊழியர்கள் தயாராக இருக்கிற போது இந்தத் துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும் அரசாங்கம் நிரப்பு வது தானே நியாயமாக இருக்கும் என்றார்.ஆந்திராவை போல் அஷ்யூர்டு பென்சன் திட்டத்தை தமிழகத்திலும் அமல்படுத்தலாம் என்று சில ஐஏஎஸ் அதிகாரிகள் அர சுக்கு ஆலோசனை தந்தார்கள்.ஆனால் ஆந்திராவிலேயே அந்த யோசனை நிரந்தரமாக நிறுத்தி வைக்கப்பட் டுள்ளது. எனவே பழைய ஓய்வூதிய திட்டத்தை அடைவதற்காக தொடர்ந்து வலுவாக போராட்டங்களை நடத்த வேண்டியுள்ளது என்றார்.
கு.வெங்கடேசன்
சிறப்பு பொதுக்குழு கூட்டத்தை வாழ்த்திப்பேசிய தமிழ்நாடு தலைமை செயலக ஊழியர் சங்கத்தின் தலைவர் கு.வெங்கடேசன், அரசுத்துறையில் எல்லா அலுவலகங்களிலும் குருப் டி பணியிடங்களை ஒழித்துக்கட்டும் வேலையில் அரசு இறங்கியுள்ளது. அவுட் சோர்சிங், காண்ட்ராக்ட் ஆகியவற்றின் தொடர்ச்சியாக கன்சல் டன்ஸ் என்ற பெயரில் ஒருலட்சம் இரண்டு லட்சம் ரூபாய் சம்பளத்தில் எல்லாத் துறையிலும் ஆலோசகர் கள் நியமிக்கப்பட்டுக் கொண்டிருக்கி றார்கள். இவர்கள் சொல்வதைத்தான் அரசு செயலர்கள் செய்து கொண்டி ருக்கிறார்கள் என்றார். இப்போது மறு சீரமைப்பு என்ற வேலையை தொடங்கியுள்ளனர். இதனால் நியா யமாக கிடைக்கக்கூடிய பதவி உயர்வு இனி கிடைக்காமல் போகலாம். வேளாண் பொறியியல் பிரிவில் அதி காரிகளும் அமைச்சுப்பணியாளர் களும் கடுமையாக போராடியதால் பதவி உயர்வு பணியிடங்களை பாதுகாக்க முடிந்தது. இல்லை யென்றால் அப்பதவியிடங்கள் ஒழித்து க்கட்டப்பட்டிருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
தீர்மானங்கள்
இந்த சிறப்பு பொதுக்குழுவில் துறை நிர்வாக சீரமைப்பில் வட்டார அள வில் இளநிலை நிர்வாக அலுவலர் பணி யிடம், மாவட்ட மண்டல அளவில் நிர்வாக அலுவலர் பணியிடங்களை உருவாக்க வேண்டும், நீண்டகாலமாக தீர்க்கப்படாத இளையோர் மூத்தோர் ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும், சத்துணவு நேர்முக உதவி யாளர் பணியிடத்தை கண்காணிப்பா ளர்களை கொண்டு நிரப்பவேண்டும், தொழிற் கூட்டுறவு அலுவலர் பதவி உயர்வில் கண்காணிப்பாளர் தொழிற் கூட்டுறவு மேற்பார்வையாளர் ஆகியோ ரது விகிதாச்சாரத்தை மாற்றி எண்ணிக்கை அடிப்படையில் பதவி உயர்வு வழங்கவேண்டும், பாலினம் வேறுபாடின்றி ஆண் கண்காணி ப்பாளர்களுக்கும் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலராக பதவி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தமிழ்நாடு சமூக நலத்துறை பணியாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சு.மலர்விழி வரவேற்றுப்பேசினார். பொன் விழா ஆண்டு அறிக்கையை பொதுச்செய லாளர் க.துரைசிங் தாக்கல்செய்து பேசினார். அரசு ஊழியர் சங்கத்தின் துணைப்பொதுச்செயலாளர் தெ.வாசுகி, வடசென்னை மாவட்டத் தலைவர் வே.விஜயகுமரன்,தென் சென்னை மாவட்டத்தலைவர் த.முத்து குமாரசாமிவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். மாநிலப் பொருளாளர் நா.முரு கானந்தம் நன்றி கூறினார்.