சென்னை, ஜூன் 25- சுதந்திரப் போராட்ட வீரர் தியாகி இமானுவேல் சேகரனார். அவரது சமூக பங்களிப் பினை போற்றும் வகையில் அவரது பிறந்த நாள் நூற் றாண்டையொட்டி அவருடைய திரு உருவ சிலையுடன் கூடிய மணிமண்டபம் ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூபாய் மூன்று கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. அவ ரது பிறந்த நாளான அக்டோபர் 9 அன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் ஆண்டு தோறும் அரசு விழா கொண்டாடப்படும்.
அண்ணல் தங்கோ
தமிழ் மொழி மீது தீராத பற்று கொண்டு, வடமொழி பெயர்களை தமிழ்ப்படுத்திய சுதந்திரப் போராட்ட தியாகி கு.மு. அண்ணல் தங்கோ. அவருக்கு வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளான ஏப்ரல் 13 அன்று வேலூர் மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
ப.சுப்பராயன்
சமூகநீதிக் கோட்பாடுகளுக்கு முதன் முதலில் சட்ட வடிவம் கொடுத்தவரான சென்னை மாகாணத்தின் முன்னாள் முத லமைச்சர் டாக்டர் சுப்பராயன் அவர் களின் பிறந்த நாளான செப்டம்பர் 11 அன்று சென்னையில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண்டாடப்படும்.
டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி
தமிழ்நாட்டின் முதல் பெண் மருத்து வர்- முதல் சட்டப்பேரவை உறுப்பினர்- இந்திய பெண்கள் சங்கத்தின் முதல் தலைவர்- தமிழ்நாட்டின் சமூக சீர்திருத்த பெண் போராளி முத்துலட்சுமி ரெட்டி அம்மையாருக்கு புதுக்கோட்டையில் திருவுருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்த நாளான ஜூலை ஏழாம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆண்டுதோறும் அரசு விழாவாக கொண் டாடப்படும்.
சீகன் பால்கு
ஜெர்மனி நாட்டைச் சார்ந்த சீகன் பால்கு, இந்தியாவிற்கு வருகை தந்து தமிழ் மீது ஆர்வம் கொண்டு தமிழை நன்கு கற்று அறிந்ததோடு தமிழ்நாட்டில் முதன் முதலில் 1813 ஆம் ஆண்டு தரங் கம்பாடியில் அச்சு இயந்திரத்தை நிறுவி கிறித்துவ மக்களின் புனித நூலான புதிய ஏற்பாடு என்னும் பெயரில் தமி ழில் மொழிபெயர்த்து அச்சிட்டு வெளி யிட்ட பெருமைக்குரியவர். இன்று தமி ழில் பல நூல்களை அச்சிடுவதற்கு அடித் தளமிட்ட அவரின் பெருமைகளை போற் றும் வகையில் சிலையுடன் கூடிய அரங் கம் அமைக்கப்படும்.