tamilnadu

ஒரே நாடு - ஒரே தேர்தல் முறை ஜனநாயகத்துக்கு எதிரானது

சென்னை, ஜன.18- ஒரே நாடு- ஒரே தேர்தல் முறை ஜனநாயகத்துக்கு எதிரானது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்து உயர் நிலைக்குழு தலைவர் நிதின் சந்திராவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், 1967 வரை இந்திய மக்களவைக்கும், மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே நேரத்தில் தான் பொதுத் தேர்தல் நடத்தப்பட்டு வந்தது. மாநில அரசுகள் கலைக்கப்பட்டது,

புதிய மாநிலங்கள் உருவானது உள்ளிட்ட காரணங்களால் தேர்தல்களின் சுழற்சியில் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. இப்போது ஆந்திர பிரதேசம், சிக்கிம் உள்ளிட்ட சில மாநிலங்களில் மட்டும் சட்டமன்றத் தேர்தல் மக்களவை தேர்தலுடன் சேர்த்து நடத்தப்படுகிறது. இந்நிலையில், இப்படி ஒரு முயற்சியில் ஒன்றிய அரசு இறங்கியிருக்கிறது. தேர்தலுக்கு ஆகும் செலவு குறையும். ஆளும் கட்சிக்கு தேர்தல்களில் கவ னம் செலுத்துவது குறைந்து,  ஆட்சியில் நல திட்டங்களில் கவனம் செலுத்த முடியும் என்பது போன்ற வாதங்கள் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு ஆதரவாக முன்வைக்கப்படுகின்றன.

ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் போது சில  மாநில அரசுகள் அவற்றின்  பதவிக்காலம் நிறைவடை வதற்கு முன்பே கலைக்க வேண்டிய சூழல் உருவா கும். இது கூட்டாட்சி தத்து வத்திற்கு எதிரானது என்று  எதிர்க்கட்சிகள் முன்வைக் கும் வாதம் புறக்கணிக்கத் தக்கது அல்ல. மேலும், இந்தியக் கூட்டாட்சி அமைப்பு நாடாளுமன்றம், சட்ட மன்றங்கள், உள்ளாட்சி அமைப்புகள் என மூன்று அடுக்கு அரசாட்சி அமைப்பு நிலவுகிறது. ஒரே நேரத்தில் இவை அனைத்துக்கும் தேர்தல் நடத்துவது இந்த  அடுக்குகளுக்கு இடை யிலான சமநிலையை பாதிக்கக்கூடும். அரசியலமைப்புச் சட்டத்தின் படி நாடாளு மன்ற மக்களவை மற்றும் சட்டப்பேரவையின் காலம்  ஐந்து ஆண்டுகள்.

அதே நேரம், அமைச்சரவை முடிவு  அடிப்படையிலும், அவசர பிரகடனத்தை சுட்டிக்காட்டி ஆளுநர் ஆட்சியை கலைக்கலாம். ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்பதற்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை  கலைப்பது என்பது, மக்கள்  எண்ணத்துக்கு எதிரானது. இந்தத் திட்டத்துக்காக அரசைக் கலைத்தால், தேர் தலுக்காக செலவிடப்பட்ட மக்களின் வரிப்பணம் வீணா கும். ‘ஒரே நாடு ஒரே தேர் தல்’ என்பது நடைமுறைக்கு  ஒத்துவராத திட்டம். எனவே, இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.