தேர்தல் விதிமீறி பிரச்சாரம்
அண்ணாமலை உட்பட 700 பேர் மீது வழக்கு
திருச்சிராப்பள்ளி, மார்ச் 31- பாஜக மாநிலத் தலைவர் அண்ணா மலை திருச்சி தென் னூரில், அமமுக வேட் பாளர் செந்தில்நாதனை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அப்போது, அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி பிரச்சாரம் செய்ததாகக் கூறி திருச்சி தில்லை நகர் போலீசார் அண்ணாமலை மற்றும் தொண்டர்கள் உட்பட 700 பேர் மீது மொத்தம் 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஆரத்தி எடுத்தவர்களுக்கு பணம்
ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளில் வழக்கு!
அறந்தாங்கி, மார்ச் 31- பாஜக கூட்டணி யில் இராமநாதபுரம் தொகுதியில் போட்டி யிடும் முன்னாள் முதல் வர் ஓ. பன்னீர்செல் வத்திற்கு பலாப் பழம் சின்னம் ஒதுக் கீடு செய்யப்பட்டுள் ளது. இதனிடையே, அறந்தாங்கியில் தனக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு ஓ.பன்னீர்செல்வம் தேர்தல் விதிமுறை களை மீறி, ரூ. 2000 பணம் கொடுத்தது, அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பா கவே கூட்டம் நடத்தியது ஆகிய விதி மீறல் தொடர்பாக, ஓ.பன்னீர்செல்வம் மீது 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
ஜாபர் சாதிக் வழக்கில் இயக்குநர் அமீருக்கு சம்மன்
சென்னை, மார்ச 27- ரூ. 2 ஆயிரம் கோடி மதிப்பிலான போதைப் பொருளை சட்டவிரோதமாக கடத்திய வழக்கில் ஜாபர் சாதிக்கை போதைப் பொருள் தடுப்புத் துறை யினர் மார்ச் 9 அன்று தில்லியில் வைத்து கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கில், திரைப் பட இயக்குநர் அமீரை, ஏப்ரல் 2 அன்று தில்லி அலுவலகத்தில் ஆஜராகுமாறு மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு சம்மன் அனுப்பியுள்ளது. ஜாபர் சாதிக் தயாரிக்கும் படத்தை அமீர் இயக்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இயக்குநர் அமீர், விசாரணையை எதிர்கொள்ள தயார் என தெரிவித்துள்ளார்.