சென்னை,பிப்.16 தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைத்து ள்ளார். 2016 ஆம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலின் போது அதிமுக வெற்றிபெற்றது. இதையடுத்து தொடர்ந்து ஜெயலலிதா முதல மைச்சராக பதவியேற்றார். ஆனால் ஓராண்டிற்குள் அவர் உடல் நலக்குறைவால் மரண மடைந்தார். இதையடுத்து ஒ.பன்னீர்செல்வம் முதல மைச்சராக பதவியேற்றார். ஆனால் அவருக்கும் அதிமுகவை ஆட்டிப்படைத்த சசிகலாவு க்கும் மோதல் ஏற்பட்டதால் கட்டாயப்படுத்தி முதல்வர் பதவியில் இருந்து இறக்கப்ப ட்டார். இதையடுத்து சசிகலா முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டார். ஆனால் அவருக்கு சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் 4 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து விட்டதால் அவரது கனவு தவிடு பொடியானது. இதையடுத்து அவரது முகவராக எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக அறிவித்தார். ஜெயலலிதா அமைச்சர வையில் 3 முறை அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமி முதல்முறையாக முதலமை ச்சராக பதவியேற்றார். அவரது தலைமையிலான ஆட்சி ஞாயிற்று க்கிழமையோடு 3 ஆண்டுகளை நிறைவு செய்து 4வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி அதிமுக அலுவலகத்திற்கு வந்த அவரு க்கு அ.தி.மு.க. நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தனர். இனிப்புகளும் வழங்கினார்கள்.