tamilnadu

img

ஜெயலலிதா மறைவுக்கு மேல்முறையீடு வழக்குத்தான் காரணம் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறுவது திட்டமிட்ட பொய் : திமுக கண்டனம்......

சென்னை:
ஜெயலலிதா மறைவுக்கு திமுகபோட்ட மேல்முறையீட்டு வழக்குதான் காரணம் என்று முதல்வர் கூறுவது திட்டமிட்ட பொய் என்று திமுக கண்டனம் தெரிவித்துள்ளது. 

சென்னை அறிவாலயத்தில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் திமுக எம்.பிஎன்.ஆர். இளங்கோ செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, அவர்கள் கூறியுள்ளதாவது:

திமுக மீது தேவையில்லாமல் முதலமைச்சர் பழனிசாமி பொய்பிரச்சாரம் செய்கிறார். ஜெயலலிதாமீதான வழக்கை 1995 முதல் உச்சநீதிமன்ற இறுதி தீர்ப்பு வரை திமுக சட்டரீதியாக மேற்கொண்டது. தேர்தல் ஆதாயம் கருதி திமுக தலைவர் மீதும், கலைஞர் மீதும் அவதூறு பிரச்சாரம் செய்கிறார் பழனிசாமி.கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு பின் ஜெயலலிதா மீதான வழக்கை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய பாமக வலியுறுத்தியது. ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசை வலியுறுத்தியது பாமக தான்.2015 மே 14ம் தேதி அப்போதையகர்நாடக முதல்வர் சித்தராமையாவை பாமக நிர்வாகிகள் நேரில் சந்தித்து மேல்முறையீடு செய்ய வலியுறுத்தினர். இப்போது தோல்வி பயத்தில் எடப்பாடி பழனிசாமி திமுக மீது பொய் புகார்கூறுகிறார். இவ்வாறு ஆர்.எஸ்.பாரதி கண்டனம் தெரிவித்துள்ளார். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கையை வெளியிடவிடாமல் தடுப்பது எந்த சக்தி என்று ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பினார்.

;