tamilnadu

img

மின்வாரிய அதிகாரிகள் வீட்டில் ரூ.360 கோடி மதிப்புடைய ஆவணங்கள் பறிமுதல்

சென்னையில் மின்வாரிய அதிகாரிகளுக்கு தொடர்புடைய இடங்களில், அமலாக்கத்துறை நடந்திய சோதனையில் ரூ.360 கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2011 முதல் 2016 வரை விசாகப்பட்டினத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலக்கரி கொண்டுவந்ததில் ரூ.908 கோடி மோசடி நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், கடந்த 24-ஆம் தேதி டான்ஜெட்கோ அதிகாரிகள் தொடர்புடைய 10 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனையில் ரூ.360 கோடி மதிப்புடைய சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 

;