சென்னை, ஆக. 3 - “அருந்ததியர் உள் இட ஒதுக் கீட்டை உறுதி செய்திருக்கும் வர லாற்று முக்கியத்துவம் வாய்ந்த உச்ச நீதிமன்ற தீர்ப்பை சிபிஐ(எம்) வர வேற்றுள்ளது. அதேசமயம் அந்த தீர்ப்பின் பகுதியாக இடம்பெற்றுள்ள பொருளாதார வரம்பு பற்றிய சில நீதிபதிகளின் கருத்துக்கள் ஏற்புடை யதல்ல!” என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
“பட்டியல் சாதி/பட்டியல் பழங்குடி மக்களுக்கான இட ஒதுக் கீட்டில் பொருளாதார வரம்பு தீர்மானிப் பது அந்த இட ஒதுக்கீட்டின் நோக்கத் தையே ஒட்டுமொத்தமாக பாழ்படுத்தி விடும்!” என்றும் கே. பாலகிருஷ் ணன் குறிப்பிட்டுள்ளார்.
“பட்டியலினத்தவர்களுக்குள் உள் இடஒதுக்கீடு வழங்க, அரசி யலமைப்புச் சட்ட அடிப்படையில் எந்தத் தடையும் இல்லை. பிற்படுத்தப் பட்ட வகுப்பினர் மற்றும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவுகளில் ஒரு தரப்பு மட்டுமே பலன்களை அனுபவித்தால், அதில் மாநில அரசுகள் தலையிட முடியும்; அந்த வகையில், தமிழ்நா ட்டில் அருந்ததியருக்கான 3 சத விகித உள் இடஒதுக்கீட்டை நடைமு றைப்படுத்த அனுமதிக்கப்படுகிறது” என்று தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதி மன்றத்தின் 7 நீதிபதிகள் அமர்வு 1:7 என்ற பெரும்பான்மை அடிப்படை யில், கடந்த வியாழக்கிழமையன்று தீர்ப்பு வழங்கியிருந்தது.
இவ்வாறு தீர்ப்பளித்த 6 நீதிபதி களில் ஒருவரான பி.ஆர். கவாய், இடஒதுக்கீட்டு உரிமையைப் பெறு வதற்கு பட்டியலினத்தவர்கள் மற்றும் பழங்குடியினத்தவர் இடையேயும் பொருளாதார வரம்பு (கிரீமிலேயர்) முறை கொண்டுவரப்பட வேண்டும் என்று கூறினார். அதனை, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதி மனோஜ் மிஸ்ரா ஆகியோர் தவிர, நீதிபதிகள் விக்ரம் நாத், பங்கஜ் மித்தல், சதீஷ் சந்திர சர்மா ஆகி யோர் ஆதரித்து கருத்து தெரிவித் திருந்தனர்.
இந்தப் பின்னணியிலேயே, எஸ்.சி.-எஸ்.டி. இடஒதுக்கீட்டில் பொரு ளாதார வரம்பு வேண்டும் என்ற நீதி பதிகளின் கருத்துக்கு கே. பாலகிருஷ் ணன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.