tamilnadu

img

முழு ஊரடங்கு நாளில் மின் நுகர்வு 6 கோடி யூனிட் குறைந்தது

சென்னை:
முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட கடந்த ஞாயிறன்று மின் நுகர்வு 6 கோடி யூனிட்கள் குறைந்தன.தமிழகத்தில் தினமும் சராசரியாக 30 கோடி யூனிட்கள்என்ற அளவில் மின்நுகர்வு உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு ஏப்ரல் 12-ம் தேதி தினசரி மின்நுகர்வு 36.99 கோடியாக அதிகரித்தது. இதுவே இதுவரை உச்ச அளவாக உள்ளது.தற்போது ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டு தொழிற்சாலைகள், வணிகநிறுவனங்கள் உள்ளிட்ட வை செயல்படத் தொடங்கி உள்ளதால், தற்போது தினசரி மின்நுகர்வு 29 கோடி யூனிட்கள் என்ற அளவில் உள்ளது.இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வில்லாத முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு வருகிறது. இதனால் கடந்த ஞாயிறன்றுகடைகள், தொழிற்சாலை கள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளிட்டவை அடைக்கப் பட்டன. இதனால், அன்றையதினம் மின்நுகர்வு 5.97 கோடியூனிட்கள் சரிவடைந்தன.இதன்மூலம், அன்றைய தினம் மின்நுகர்வு 22.57 கோடி யூனிட்களாக இருந்தது என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

;