tamilnadu

img

துரைமுருகன் எனது நெடு நாள் நண்பர்! ரஜினி முற்றுப்புள்ளி

சென்னை, ஆக. 26 - சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற புத்தக வெளி யீட்டு விழாவில், திமுக அமைச்சர் எ.வ.  வேலு எழுதிய ‘கலைஞர் எனும் தாய்’  புத்தகத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வெளியிட, அதன் முதல் பிரதியை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார்.

அப்போது, பேசிய ரஜினிகாந்த், “கலைஞர் எதிர்கொண்ட அரசியல் சவால்கள் குறித்து பெருமையாக பேசி னார். தொடர்ந்து பேசிய அவர், “மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எப்படி சமாளிக்கிறார் என்றும் கூறினார்.

இந்நிலையில், திமுக மூத்த அமைச்சர் துரைமுருகன், “வயதான நடிகர்களால் சினிமாவில் இளைஞர்களுக்கு வாய்ப்பில்லை” என்று கூறினார். இது  ரஜினிக்கான பதிலடியாகபார்க்கப்பட்டது.

இது குறித்து விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் ரஜினிகாந்த், “துரைமுருகன் எனது நீண்ட நாள் நண்பர். எங்கள் இரு வருக்கும் இடையிலான நட்பு எப்போ தும் தொடரும். துரைமுருகனை எனக்கு  மிகவும் பிடிக்கும். அவர் என்ன சொன்னா லும் எனக்கு வருத்தம் கிடையாது” என்று கூறினார்.

இதனிடையே, தனது பேச்சுக்கு அமைச்சர் துரைமுருகனும் விளக்கம் அளித்துள்ளார். அதில், “எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவை யாக பயன்படுத்த வேண்டாம் என்றும் நாங்கள் எப்போதும் போல் நண்பர் களாகவே இருப்போம்” என்று கூறி யுள்ளார்.