tamilnadu

img

பலத்த மழையால் வீட்டின் சுவர் இடிந்து பெண் பலி

ராயபுரம், செப்.19- சென்னை மண்ணடி, நவாஸ்கான் தெருவில் வசித்து வந்தவர் செரீனா பானு என்கிற பத்மினி (42). இவரது கணவர் கடந்த 20 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகன் லெனின்குமார் அருகில் உள்ள பள்ளியில் 10 ஆம் வகுப்பு படிக்கிறார். மகள் நஸ்லின் பாத்திமா தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.  இந்நிலையில், புதனன்று இரவு  மண்ணடி பகுதியில் பலத்த மழை கொட்டியது.  இதில் வீட்டின் மேற்கூரை யும், சுவரும் இடிந்து  செரீனா பானு மீது விழுந்தது.  தலை யில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது மகளும், மகனும் தனியாக கட்டிலில் தூங்கியதால் உயிர் தப்பினர்.  இது பற்றி தகவல் அறிந்ததும் எஸ்பிளனேடு காவல்துறையினர் விரைந்து வந்த செரீனா பானுவின் உடலை மீட்டு பரிசோதனை க்காக சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். செரீனா பானு தங்கி இருந்த வீடு ஒரு கோவிலுக்கு சொந்தமான இடம் என்று தெரிகிறது. அவர் கடந்த 20 ஆண்டுக்கும் மேலாக இங்கு வசித்து வந்து உள்ளார். வீடு ஏற்கனவே சேதம் அடைந்து இருந்ததாகக் கூறப்படுகிறது. ஏற்கனவே தந்தையை இழந்து இருந்த நஸ்லினும், லெனின் குமாரும் தற்போது தாயையும் இழந்து தவிப்பில் உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.