சென்னை, ஜூலை 1- தமிழகமே வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார். தமிழக சட்டப்பேரவையில் குடிநீர் பிரச் சனை குறித்து கொண்டு வரப்பட்ட சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தின் மீது கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் கட்சி சட்டமன்றக் குழுத் தலைவர் கே.ஆர்.ராமசாமி,“தமிழகம் முழுவதும் வறட்சியால் மக்கள் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். ஒரு குடம் தண்ணீர் பத்து ரூபாய் முதல் 15 ரூபாய் வரைக்கும் விலை கொடுத்து வாங்கும் நிலைமை ஏற்பட்டுள் ளது. தண்ணீர் பற்றாக்குறையை போக்க அரசு நிரந்தர தீர்வுக்கு நடவடிக்கை எடுக்க வில்லை என்றார்.
தண்ணீர் தட்டுப்பாடு
அப்போது குறுக்கிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “இயற்கை பொய்த்து விட்டது. நீங்கள் ஒரு விவசாயி, மனசாட்சிப் படி பேசுங்கள். தண்ணீர் இருந்து கொடுக்க வில்லையா? உடனடியாக எங்கேயாவது எடுத்து கொடுக்க முடியாது. இன்றைக்கு தமி ழகம் முழுவதும் வறட்சியால் பாதிக்கப் பட்டிருக்கிறது. 40 ஆண்டு காலம் 50 ஆண்டு காலம் இல்லாத வறட்சி தமிழகத்தில் நிலவு கிறது. எந்த ஏரி குளங்களிலும் எங்கேயும் தண்ணீர் இல்லை. வறண்டு இருக்கின்றன. நிலத்தடி நீர் கீழே சென்றுவிட்டது. ஆகவே, மக்களுக்கு பல்வேறு அன்றாட தேவை களுக்கான தண்ணீர் கிடைக்கவில்லை. இத னால் குடிநீருக்கு வழங்க வேண்டிய நீரை அதிக அளவில் பயன்படுத்துவதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டிருக்கிறது.” என்றார். எதிர்க் கட்சித் தலைவர் குறிப்பிட்டதும் உண்மைதான். சில அணைகள் வறண்டு போய் இருக்கின்றது. இப்படி இருக்கும் காலக் கட்டத்தில்தான் மக்களுக்கு 7, 508 எம்எல்டி தண்ணீர் வழங்கி வருகிறோம் என்று முதல் வர் கூறினார்.
தட்டுப்பாடு இல்லையாம்
முதலமைச்சர் விளக்கத்தைத் தொடர்ந்து உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலு மணி பேசுகையில் ,“ கடந்த ஐந்தாண்டு கால மாக மாநில அரசு எடுத்து வரும் நடவடிக்கை களை பட்டியலிட்டார். தமிழக மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் தடையின்றி வழங்க வேண்டும் என்பது இந்த அரசின் நோக்கம் என்றும் தற்போது ஏற்பட்டிருப்பது தண்ணீர் பஞ்சமல்ல, பற்றாக்குறைதான் என்றும் ஏற்கனவே வெளியில் சொன்னதையே மீண்டும் அவையிலும் சொன்னார்.