சென்னை, டிச. 10 - ஆன்லைன் அபராதம், புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி செவ்வாயன்று (டிச.10) சென்னையில் சாலை போக்கு வரத்து, மோட்டார் வாகன தொழி லாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அநியாய ஆன்லைன் அபராதத்தை கைவிட வேண்டும், சாலை விபத்து நிகழும்போது ஓட்டுநர் மீது கொலை வழக்கு பதியாமல், சொந்த ஜாமினில் விடுவிக்க வேண்டும், ஓலா, உபர், போர்ட்டர் போன்ற நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும் அக்ரிகேட்டர் விதிமுறையை உருவாக்க வேண்டும்.
பிஎன்எஸ் 106 (1), 106 (2) சட்டபிரிவு வழக்கில் 5 ஆண்டுகள் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதை கைவிட வேண்டும், பள்ளி வாகனம் போன்ற மேக்சி கேப் வாகனங்களில் பொருத்த ப்பட்டுள்ள முழுமையான இருக் கையை அனுமதிக்க வேண்டும். அதற் கேற்ப சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். மேக்சிகேப் வேன்களை ஆம்னி பேருந்து என்று மாற்றி மோட்டார் வாகன வரி விதிக்க கூடாது, மோட்டார் வாகன தொழிலாளர்கள் விபத்தில் மரண மடைந்தால் 5 லட்சம் ரூபாயும், இயற்கை மரணமடைந்தால் 2 லட்சம் ரூபாயும் வழங்க வழங்க வேண்டும்,
நலவாரிய பணபலன்களை இரட்டிப் பாக்க வேண்டும். ஆட்டோ மீட்டர் கட்டணத்தை உயர்த்த வேண்டும். சென்னை விமான நிலையத்தில் பிரிப்பெய்டு டாக்சியை விரிவாக்கம் செய்ய வேண்டும். அரசே அதை முன்னின்று நடத்த வேண்டும். பிரிப் பெய்டு சேவையை தனியாரிடம் (ஓலா, உபர்) ஒப்படைக்கக் கூடாது. கால்டாக்சிகளுக்கு ஆட்டோக்களுக் கான மீட்டர் கட்டணத்தையே நிர்ண யிக்க வேண்டும். அதற்கான செயலி களை (ஆப்) உருவாக்க வேண்டும்.
கோயம்பேட்டில் சரக்கு வாக னத்தை நிறுத்த இடம் ஒதுக்க வேண்டும், நுழைவு வரியை ரத்து செய்ய வேண்டும், மேக்சிகேப், டாடா மேஜிக், ஷேர் ஆட்டோ வாகனங் களுக்கு ஸ்டேஜ் கேரியர் பர்மீட் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு உள்ளிட்ட 15 அமைப்புகள் சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. சிஐடியு தென்சென்னை மாவட்டச் செயலாளர் பா.பாலகிருஷ்ணன் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு சாலை போக்கு வரத்து தொழிலாளர் சம்மேளன பொது ச்செயலாளர் வி.குப்புசாமி, நிர்வாகி கள் ம.உதயகுமார், ஜெ.முகமது அனிபா, ராயப்பன், ஏ.எல்.கண்ணன் மற்றும் வெற்றி வேல் (உரிமை கரங்கள்), ஜாகீர் உசேன் (உரிமைக் குரல்) உள்ளிட்டோர் பேசினர். இதனைத் தொடர்ந்து போக்கு வரத்து ஆணையர் சுன்சோங்கம் ஜடக் சிரு-விடம் மனு அளித்து தலைவர்கள் பேசினர்.