tamilnadu

சென்னை முக்கிய செய்திகள்

ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் அடுத்த மாதம் சென்னை வருகை

சென்னை, ஆக.20- சென்னையின் போக்கு வரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டு வரு கிறது. தற்போது, முதல் கட்ட திட்டம் விமான நிலையம்-விம்கோ நகர், சென்னை சென்ட்ரல் - பரங்கிமலை என 2 வழித்தடங்களில், 54 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், 2-ம் கட்ட மெட்ரோ ரயில் வழித்தடத்தில் ஓட்டுநர் இல்லாத 62 மெட்ரோ ரயில்கள் தயாரிப்பு பணி ஆந்திர மாநிலம் ஸ்ரீ சிட்டியில் நடந்து வருகிறது. அந்த வகையில், முதற்கட்டமாக 3 பெட்டிகள் கொண்ட ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயில் செப்டம்பர் மாதம் சென்னைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இதற்கான பணிகள் முழு வீச்சில் நடந்து வருவதாக மெட்ரோ ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

இலவச  பேருந்து அட்டை வழங்கும் முகாம்

 செங்கல்பட்டு, ஆக.20- செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் மற்றும் பார்வை குறைபாடுடைய மாற்றுத் திறனாளிகள் சென்னை மாநகர பேருந்துகளில் இலவச பேருந்து பயண அட்டை பெறு வதற்கான முகாம் செங்கல்பட்டு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்திலும், மீனம்பாக்கம் ரயில் நிலையம் அருகில் உள்ள முக்தி நிறுவனத்திலும் திங்கள் முதல் வரும் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

கழிவுநீர் தேக்கத்தால் மணலி மக்கள் அவதி!

சென்னை,ஆக.20- சென்னை மணலி பல்ஜி பாளையம் பகுதியில் மாநகராட்சியும் பொது தனி யார் கூட்டமைப்பு நிறுவ னம் இணைந்து பயோ கேஸ் தயாரிக்கும் நிறுவனம்  வைத்துள்ளது. சுற்று வட்டாரத்தில் உள்ள குடியிருப்புகளில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் குப்பைகளை சேகரித்து அதிலிருந்து பயோ கேஸ் தயாரித்து வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு விநியோகிக்கப்படுகிறது. இந்நிறுவனத்திலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரால் அப்பகுதி சேறும்  சகதியுமாக காட்சியளிக்கி றது. இதிலிருந்து துர்நாற்றம்  வீசுவதோடு கொசுத் தொல்லைகள் அதிகமாகி வருகிறது.இரவில் தூங்க முடியாமல் மக்கள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, கழிவுநீரை அப்புறப்படுத்தி சுற்றுப் புறத்தை தூய்மையாக வைக்க மாநகராட்சி சுகா தாரத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண் டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ள னர்.

தொழிலாளி உயிரிழப்பு

சென்னை,ஆக.20- சென்னை இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் கட்டுமான பணியின்போது இரும்பு கயிறு அறுந்து வடமாநில தொழி லாளி உயிரிழந்தார். சென்னை பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் 40 அடி உயரத்தில் மெட்ரோ பாலத்தின்  மீது தடுப்புகள் அமைக்கும் பணியின் போது, இரும்பு கயிறு அறுந்து தடுப்புடன் சேர்ந்து கீழே விழுந்த பஞ்சாப் மாநிலத்தைச்சேர்ந்த தொழிலாளி தேவேந்திர சிங்(27) உயிரிழந்தார்.